செய்திகள் :

விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை... பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைகள்!

post image

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கோரி, த.வெ.க நிர்வாகிகள் வேலூர் மாவட்ட எஸ்.பி சிவராமனிடம் மனு அளித்திருக்கின்றனர். இதையடுத்து, கூட்டம் நடக்கவிருக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டிருக்கிறார் எஸ்.பி சிவராமன்.

அனுமதி வழங்கும் முன்பு 20 நிபந்தனைகளையும் கடைப்பிடிக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை திறந்தவெளி மைதானத்தில் பந்தல், நாற்காலிகள் போடாமலேயே விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், விபரீத நிகழ்வுகளும் அரங்கேறின.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

எனவே, த.வெ.க தொண்டர்களும், பொதுமக்களும் வெயிலில் நிற்காமல் இருக்கவும், விபரீதங்களைத் தவிர்க்கவும் முதன்முறையாக வேலூர் கூட்டத்தில் நாற்காலிகள் வசதியுடன் பந்தல் அமைக்கப்படவிருக்கிறது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள்ளாக கூட்டத்தை நடத்தி முடிக்கவும் போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதற்காக, 33 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சமன் செய்யப்பட்டிருக்கிறது. வாகனங்களை பார்க்கிங் செய்யவும் தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதையொட்டி, இன்று காலை சிறப்புப் பூஜைகளுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், த.வெ.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! - தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!

தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு துருவங்கள் கோலோச்சிய காலத்தில... மேலும் பார்க்க

கோவை உடன்பிறப்புகள் vs கரூர் கம்பெனி; திமுகவில் வெடித்த மோதல்; செந்தில் பாலாஜி திட்டத்தில் டிவிஸ்ட்!

சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைத்து, ஏழாவது முறை அரியணை ஏறுவதற்கு திமுக காய் நகர்த்தி வருகிறது. கடந்த காலங்களில் கோட்டை வ... மேலும் பார்க்க

"ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" - திமுகவில் இணைந்த தேமுதிகவை விமர்சித்த பாஜக

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது.தேமுதிக, திமுக... மேலும் பார்க்க

'ஆறில் நான்கு வேண்டும்' அடம்பிடிக்கும் பா.ஜ.க டு புறக்கணிக்கும் வேல்முருகன்! | கழுகார் அப்டேட்ஸ்

அடம்பிடிக்கும் பா.ஜ.க!'ஆறில் நான்கு வேண்டும்'கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டது. மீத... மேலும் பார்க்க

`அவருக்கு சீட் கொடுத்தால் தோற்கடிப்போம்' - ஆலங்குளம் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு எதிராக போஸ்டர்

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகிலுள்ள தாயார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஜி.ராஜேந்திரன். இவர், திருப்பூரில் தொழில் புரிந்து வருகிறார். இவர்,கடந்த 2001-ம் ஆண்டு ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிய... மேலும் பார்க்க

'10 வருடங்கள் கழித்து திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?' - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கானக் கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. தேமுதிக, திமுகவில... மேலும் பார்க்க