செய்திகள் :

ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு: 1.7 பில்லியன் டாலர் பாண்ட் இழப்பீடு வழங்க வேண்டுமா?!

post image

2021-ம் ஆண்டு விவகாரத்திற்காக விண்ணப்பித்திருந்தார் ஜோஹோவின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு.

அந்த வழக்கு இன்னமும் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், அமெரிக்க நீதிமன்றம் ஶ்ரீதர் வேம்புவிடம் அவர் மனைவியின் நிதித் தேவைகளுக்காக 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் ஒன்றை தரும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இது குறித்து ஶ்ரீதர் வேம்புவின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்....
கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர்
கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர்

"1.7 பில்லியன் டாலர் பாண்ட் உத்தரவு ஓராண்டிற்கு முன்பு வந்த உத்தரவு ஆகும். இந்த உத்தரவு பொய்யான குற்றச்சாட்டுகளால் வந்தது ஆகும்.

காரணம், ஶ்ரீதர் வேம்புவின் மனைவியின் வழக்கறிஞர் பொய்யான வாதங்களை முன்வைத்தார். இதனால், கலிபோர்னியா நீதிபதி தவறாக வழி நடத்தப்பட்டார்.

அந்த வழக்கறிஞரிடம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வாதாடுவதற்கான உரிமம்கூட இல்லை.

ஶ்ரீதர் வேம்பு ஏற்கெனவே அவர் மனைவிக்கு ZPCL-ன் 50 சதவிகித பங்குகளைக் கொடுத்துள்ளார். ஆனால், அதை இப்போது வரை அவர் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், ஶ்ரீதர் அவரை ஏமாற்றப் பார்ப்பதாக குற்றம்சாட்டுகிறார்.

மேலும், ஶ்ரீதர் அவர்களது இல்லத்தை அவரின் மனைவிக்கு கொடுத்துவிட்டார்.

ஆனாலும், நீதிபதியை ஏமாற்றி, 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் உத்தரவைப் பெற்றுள்ளனர். பின்னர், அந்த நீதிபதியே அந்தத் தொகை மிக அதிகம் என்பதைப் புரிந்துகொண்டார்.

ஶ்ரீதரால் அவரது பங்குகள் மூலம் 150 பில்லியன் டாலர்கள் கடன் வாங்க முடியும். ஆனால், அந்தப் பணத்தை அவர் மனைவி மறுத்துவிட்டார். அதனால், இவை அனைத்துமே அவரின் மனைவி ஶ்ரீதரை டார்கெட் செய்வதற்காகவே செய்கிறார்.

ஶ்ரீதர் முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்து வருகிறார். 1.7 பில்லியன் டாலர் பாண்ட் உத்தரவு இப்போது செல்லாது. அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ல்

ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவான தகவல்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் : ``இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ... மேலும் பார்க்க

ஜனநாயகன் சென்சார் : `மறு தணிக்கை; நிர்பந்திக்க முடியாது' - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவு... மேலும் பார்க்க

`அவர்கள் நீதித்துறையின் அடித்தளம்; நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது!' - உச்ச நீதிமன்றம்

குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்கியதில் தவறு செய்த நீதிபதியை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து அந்த நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருந்தார். இ... மேலும் பார்க்க

மகளை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டணை - குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த 43 வயதான மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது மனைவியுட... மேலும் பார்க்க