செய்திகள் :

`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' - சரத்குமார்

post image

தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்?  ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம் என்று எல்லாருமே கூறுகிறார்கள். அனைத்து கட்சிகளும் கூறுகின்றன.  விஜய்  மட்டும் என்ன புதிதாகவா சொல்கிறார்? நானோ என் மனைவி ராதிகாவோ வரும் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடன் பயணித்தவர்களுக்கு வாய்ப்பை வாங்கி தர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன். தி.மு.கவு-க்கும், த.வெ.க-விற்கும் போட்டி என்பதை மீறி அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது எழுதிக் கொடுத்தது அவ்வளவுதான், அதை படிக்கிறார்கள்.

சரத்குமார்

கூட்டம் அனைவருக்கும் வரும்.  வடிவேலுவுக்கும் கூட்டம் வரும் நாளைக்கு அன்பு சகோதரர் அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.  சினிமா பிரபலங்களின் கூட்டத்திற்கு வருபவர்கள் தேர்தலில் வாக்களிப்பார்களா என்பது குறித்து மக்கள்தான் முடிவெடுப்பார்கள்.  எதற்காக வாக்களிக்கப்  போகிறோம், எந்தக் கொள்கைக்காக வாக்களிக்க போகிறோம்.  அவர்கள் வந்தால் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியுமா?  என்று சிந்தித்து செயல்படுபவர்கள் மக்கள் மட்டும்தான்” என்றார்.

சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - ஹெலிகாப்டர், விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இன்று (ஜன..28) காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் ... மேலும் பார்க்க

திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!

திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்... மேலும் பார்க்க

Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் ... மேலும் பார்க்க

4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: `திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்' - ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும்பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி ம... மேலும் பார்க்க

``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகரன்

திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகள... மேலும் பார்க்க