செய்திகள் :

அடுத்தகட்ட நடவடிக்கை... நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், சி.வி.சண்முகம் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. இதனிடையே, பேரவை நடவடிக்கைகள் முடிந்த உடனேயே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினர்.

சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ
சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ

இந்த சந்திப்பின் போது, கட்சிக்குள் நிலவி வரும் அதிருப்திகள், சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எந்தவித அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்றும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளில் செய்யப்பட்ட மாற்றங்களும், முக்கிய நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இந்த அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகின்றன. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பலருக்கு இதுவரை மாற்று பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அந்த பட்டியலில் சி.வி.சண்முகமும் ஒருவர்.

தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கும் சி.வி.சண்முகம், சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது கடும் கோபத்தில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவர் தீவிரமாக பரிசீலித்து கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

கட்சிக்குள் புதிய சிக்கல் உருவாகக்கூடாது என்பதற்காகவும், இந்த விவகாரம் மேலும் பெரிதாகாமல் தடுக்கவும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம் தனது முடிவை மாற்றுவாரா அல்லது அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வாரா என்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி; சாட்டையைச் சுழற்றும் ஆட்சியரின் நடவடிக்கை தொடருமா?!

ஆக்கிரமிப்பு குடோனாக மாறிய சாலைகள்புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பிரெஞ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகள் என்றாலும், தற்போதைய மக்கள்... மேலும் பார்க்க

`5 வருடங்கள் உண்மையாக உழைத்தேன்; சில பெண் தலைவர்கள்..!'- காங்கிரஸிலிருந்து திமுகவில் இணைந்த ஸ்ரீநிதி

கோவையைச் சேர்ந்த ஸ்ரீநிதி, இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்... மேலும் பார்க்க

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை ... மேலும் பார்க்க

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க