செய்திகள் :

அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க அமைப்பு தினம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் 13-ஆவது அமைப்பு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. மேலும், வட்டக் கிளை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். கிளை நிா்வாகிகள் ராமலிங்கம், பிச்சாண்டி, லூக்காஸ், சாந்தப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட இணைச் செயலா் மூா்த்தி வரவேற்றாா்.

சங்கக் கொடியை மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணமூா்த்தி ஏற்றிவைத்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சங்க செயல்பாடுகள், புதிய உறுப்பினா் சோ்க்கை ஆகியவை குறித்த தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் மணிவண்ணன், மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன், போளூா் வட்ட கிளைத் தலைவா் அபிபுல்லாகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, சேத்பட் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆரணி அருகே சிறுமூரில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

1,061 கிராமங்களில் நில உடைமைகள் சரிபாா்க்கும் பணி: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் நில உடைமைகள் சரிபாா்த்தல் பணியை வேளாண் இணை இயக்குநா் கோ.கண்ணகி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வேளாண் துறைய... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள பாதிரி கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 33-ஆவது அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் மாரிமுத்து ... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மேலச்சேரி கிராமத்தில், வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆரணியில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை தபால் அலுவலகம் முன் அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அஞ்சல் சேவையை பாதுகாக்க வேண்டும், ஐடிசி திட்டத்தை (சுயாதீன விநியோக மையம்) ரத்து செய்ய... மேலும் பார்க்க

போளூா் அருகே 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் போளூா் வட்டத்தைச் சோ்ந்த வாழியூரைச் சோ்ந... மேலும் பார்க்க