செய்திகள் :

`அப்போ திரைச்சீலை... இப்போ பேனர்' - நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்

post image

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்
பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்

அதன்படி புதுச்சேரியில் பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இன்று மாலை புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் மோடி.

அதற்காக டெல்லியில் இருந்து தனி விமான மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை நான்கு மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.

அங்கிருந்து காரில் அஜந்தா தியேட்டர் சந்திப்புக்கு வரும் அவர், திறந்த வாகனத்தில் ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து அவர் வரும் வழியில் கருவடிக்குப்பம் பகுதியில் இருக்கும் கழிவு நீர் வாய்க்கால், சுத்தப்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்
பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்

அதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அந்த வாய்க்கால் பிரதமர் மோடி வரும் வழியில் இருப்பதால், இன்று அவசர அவசரமாக வண்ண பேனர்களை வைத்து மறைத்திருக்கிறார்கள். முன்பு திரைச் சீலை வைத்து மறைக்கப்பட்ட இடம் இப்போது இன்னும் அப்டேட் ஆகி பேனர் வைத்து மறைத்திருக்கிறார்கள். வாய்க்கால் மட்டும் சரி செய்யப்படவே இல்லை.!

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா?' - தீப விவகாரத்தில் காட்டமான நீதிபதிகள்

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே ச... மேலும் பார்க்க

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசா... மேலும் பார்க்க

'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்...' - அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

'தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்' என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

'நோ' Money, 'நோ' UPI: இனி Fastag தான் நெடுஞ்சாலைகளில் கட்டாயம்; 10-ம் தேதிக்கு மேல் இதை மீறினால்?

நெடுஞ்சாலைகளில் டோல் கேட்கள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பலரிடம் ஃபாஸ்ட் டேக் இருப்பதில்லை. அதனால், அவர்கள் டோல் கேட்டுகளில் பணமாகவும், யு.பி.ஐ-யிலும் பேமென்ட் செய்து வருகின... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் தொடரும் ஊடுருவல்; பாம்பு, முதலைகளைப் பயன்படுத்தப்போகும் எல்லைப் பாதுகாப்புப் படை

பங்களாதேஷில் இருந்து அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஊடுருவல்காரர்கள் பிரச்னை மே... மேலும் பார்க்க