செய்திகள் :

`அப்போ திரைச்சீலை... இப்போ பேனர்' - நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்

post image

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்
பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்

அதன்படி புதுச்சேரியில் பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இன்று மாலை புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் மோடி.

அதற்காக டெல்லியில் இருந்து தனி விமான மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை நான்கு மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.

அங்கிருந்து காரில் அஜந்தா தியேட்டர் சந்திப்புக்கு வரும் அவர், திறந்த வாகனத்தில் ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து அவர் வரும் வழியில் கருவடிக்குப்பம் பகுதியில் இருக்கும் கழிவு நீர் வாய்க்கால், சுத்தப்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்
பேனர் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்

அதை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகாரளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அந்த வாய்க்கால் பிரதமர் மோடி வரும் வழியில் இருப்பதால், இன்று அவசர அவசரமாக வண்ண பேனர்களை வைத்து மறைத்திருக்கிறார்கள். முன்பு திரைச் சீலை வைத்து மறைக்கப்பட்ட இடம் இப்போது இன்னும் அப்டேட் ஆகி பேனர் வைத்து மறைத்திருக்கிறார்கள். வாய்க்கால் மட்டும் சரி செய்யப்படவே இல்லை.!

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் 'நடைமுறையும்' மாறுகிறது - என்ன அது?

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில் ஃபார்ம் 16 எட்டிப்பார்க்கும். இந்த ஃபார்ம் 16 வருவதற்குப் பின்னால், பெரிய நடைமுறை உள்ளது. அதாவது ஒவ்வொரு ... மேலும் பார்க்க

சூரியசக்தி மின் உற்பத்தியில் புதிய மைல்கல் - கோடையைச் சமாளிக்க தமிழ்நாடு ரெடி!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக சூரியசக்தி மின் உற்பத்தியும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க இது பெரும் உதவியாக அமைந்துள்ளதுடன்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் வழக்கு: 3 மணிநேரம் விசாரணை செய்த நீதிபதி- குற்றவாளிகள் சொன்னது என்ன? | முழு விவரம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் தரப்பு, சிபிஐ தரப்பு, ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினரின் தரப்பு என அனைத்து த... மேலும் பார்க்க

Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! - சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்!

தவெக தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சட்டப்படி, ... மேலும் பார்க்க

போர் எதிரொலி: `சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பிரதமர் ஆலோசனை' - அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!

மத்திய ஆசியாவில் நடந்துவரும் போரால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போர் விளைவால் எரிசக்தி தட்டுப்பாடில் தொடங்கி விலைவாசி உயர்வு வரை பொதுமக்களு... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: 'இதுக்கு 'End Card' இல்லையா?' - இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

ஏற்கெனவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஈரான் போரும் தொடங்க, இந்த இறங்குமுகம் தொடர்கதையாகி வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.94-ஐ தாண்டி இந்திய ரூபாயி... மேலும் பார்க்க