செய்திகள் :

`அமமுக டு தவெக' அமைச்சர் பி.டி.ஆர், சுந்தர்.சி யை வீழ்த்திய ஸ்கெட்ச்! - யார் இந்த முஸ்தபா?

post image

மதுரை மத்தி தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுந்தர் .சி ஆகிய இருவரையும் தோற்கடித்து 15,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் மாதர் பதுருதீன் (எ) முஸ்தபா.

மிகப்பெரிய ஸ்டார்களாக இருந்த இருவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது தான் மதுரை ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

யார் இந்த முஸ்தபா? எப்படி இந்த வெற்றி சாத்தியம் ஆனது?

முஸ்தபாவின் பூர்விகம் மதுரை. வேலைக்காக அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்து, அங்கு மட்டன் கடை நடத்தி வந்திருக்கிறார். அரசியலில் ஈடுபட வேண்டுமென எண்ணத்தால் 2018 ஆம் வருடம் அ.ம.மு.க -வில் இணைந்து டிடிவி.தினகரனுடன் பயணிக்க தொடங்கி பின்பு கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்திருக்கிறார்.

சில காரணங்களால்  2019ல் அமமுகவிலிருந்து விலகி  ’தமிழ்நாடு முஸ்லீம் லீக்’ என்ற கட்சியை தொடங்கி நிறுவனதலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். விஜய் கட்சி தொடங்கியவுடன் அவருக்கு அதரவு தெரிவித்த முஸ்தபா பின்பு தவெகவின் பேச்சாளராகி மாறி ஊடகங்களில் பேசி வந்தார்.

பி.டி.ஆர் - சுந்தர் சி
பி.டி.ஆர் - சுந்தர் சி

மதுரை பூர்விகம் என்பதால் முஸ்தபாவிற்கு சிறுபான்மையின மக்கள் அதிகம் இருக்க கூடிய மதுரை மத்தி தொகுதி ஒதுக்கபட்டது. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நடத்தியதால் தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை இவரால் பெற முடிந்தது.

அதோடு  ‘நான் வெற்றி பெற்றால் என்னுடைய சொந்த செலவில் சிறுபான்மையின மக்களின் புனித தலங்களுக்கு அழைத்து செல்கிறேன்’ என வாக்குறுதி கொடுத்தது தொகுதி முழுவதும் பேசப்பட்டது. த.வெ.க தலைவர் விஜயின் அலை, முஸ்தபா மீது சிறுபான்மையின மக்கள் வைத்த நம்பிக்கை ஆகியவை அதிமுக, திமுக வேட்பாளர்களை வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது.

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க