செய்திகள் :

மாஜி காதலியிடம் மன்னிப்புக் கேட்க சென்றபோது அடி, உதை; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த காதலன் பலி

post image

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் ஹிதேஷ் ரானா. இவரது மனைவி சஞ்சல் ரானா. இதில் சஞ்சல் ரானா திருமணத்திற்கு முன்பு ரஞ்சித் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த வாலிபர் சஞ்சல் ரானாவுடன் தொடர்பில் இருந்தார்.

இதனால் சஞ்சல் ரானாவில் வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து தெரிய வந்ததும் சஞ்சல் ரானாவின் கணவர் ஹிதேஷ் ரானாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக ரானா வீட்டிற்கு ரஞ்சித் சென்றார்.

அங்கு செல்லும்போது ரஞ்சித் தனது தற்போதைய காதலியையும் அழைத்து சென்று இருந்தார். அங்கு இரவில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ரஞ்சித்தையும், அவரது காதலியையும் ரானாவும், அவரது மனைவியும் சேர்ந்து ஹாக்கி மட்டையால் சரமாறியாக அடித்து உதைத்தனர். பின்னர் ரஞ்சித்தையும், அவரது காதலியையும் மூன்றாவது மாடியில் தனி அறையில் அடைத்து வைத்தனர்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

மேற்கொண்டு அடித்து உதைப்பார்கள் என்ற பயத்தில் ரஞ்சித்தும் அவரது காதலியும் அவர்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் அதிகாலை 3 மணிக்கு மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.

இதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இரண்டு பேரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனலிக்காமல் ரஞ்சித் இறந்து போனார். அவரது காதலி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக போலீஸார் ரானாவைப் பிடித்து விசாரித்தபோது இரண்டு பேரையும் தாக்கியதை ஒப்புக்கொண்டார். தனது மனைவியுடன் ரஞ்சித் தொடர்ந்து தொடர்பில் இருந்ததால் அவரைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரானாவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக்கிய நல்லிரவு கொலை

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது. மாநில முதல்வர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தவெக ஆதரவாளர் பாம்பு தினேஷ் கைது!

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியுடன் அன்பாக பேசி பழகி வந... மேலும் பார்க்க

நெல்லை: கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு; தற்கொலை செய்த அக்கா... அக்காள் கணவரை கொலைசெய்த தம்பி!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகிலுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் மனைவி ராஜலெட்சுமி. தம்பதியினர் நெல்லையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜலெட்சுமி, தனியார் ... மேலும் பார்க்க

9 ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்; மகாராஷ்டிராவை உலுக்கிய 'கல்யாண மாஃபியா'!

மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நக... மேலும் பார்க்க

டெல்லி: மணிக்கணக்கில் மனைவியுடன் சண்டை; இளம் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை; என்ன நடந்தது?

டெல்லி தெற்கு பகுதியில் உள்ள கிரீன் பார்க் வீட்டில் அமன்குமார் சர்மா(30) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் வடகிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்தூமா கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சர்... மேலும் பார்க்க

கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; மடக்கிய NCB!

உலகம் முழுவதும் இருந்து மும்பைக்குள் அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. மும்பையில் கலம்பொலி மற்றும் பிவண்டி இடையே வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், குடோன்களில் பதுக்கி வைக்... மேலும் பார்க்க