செய்திகள் :

"அமெரிக்கா ஈரானை ஆயுதம் இல்லாமல் ஆக்கியதா? இது கட்டுக்கதை!" - ஆதாரத்தைப் பகிரும் ஈரான் அரசு

post image

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள், ஆயுதங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானால் நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது’ என்று திரும்பத் திரும்பக் கூறினார்... கூறுகிறார்... இனி கூறுவாரும்கூட.

ட்ரம்ப் சொன்னது...

ட்ரம்ப் இதை எத்தனை முறை கூறினாலும், கண்டிப்பாக ஒன்றை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் – ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டால், ஈரான் இன்னும் எப்படிக் களத்தில் சண்டை செய்கிறது என்பதை.

தற்போது ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்காவின் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சையத் அப்பாஸ் அராக்சி
சையத் அப்பாஸ் அராக்சி

அந்த அறிக்கை அமெரிக்காவின் Operation Epic Fury (OEF)-ஐக் குறித்தது. இது ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கை ஆகும்.

அப்பாஸ் அராக்சி ஷேரிங்ஸ்

அந்த அறிக்கையில் அராக்சி ஹைலைட் செய்திருக்கும் பாயிண்ட்டில், “ஈரானியத் தாக்குதல்கள் காரணமாகக் குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டடங்களும் அமைப்புகளும் சேதமடைந்தும் முற்றிலும் அழிந்தும் போயுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகம் (US CENTCOM) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மோதலின் போது (OEF) பல அமெரிக்கப் போர் விமானங்களும் சேதமடைந்துள்ளன... அழிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்க மத்திய கட்டளையகம் என்பது அமெரிக்காவின் ஒரு ராணுவ பிரிவாகும். இது தான் தற்போது ஈரான் மீது போர் தொடுத்துவரும் பிரிவு.

அராக்சி ஷேர் செய்திருக்கும் அறிக்கையில், அமெரிக்காவின் என்னென்ன போர் விமானங்கள் சேதமடைந்திருக்கின்றன என்பதும் இடம்பெற்றிருக்கிறது.

அராக்சி ஷேர் செய்த அறிக்கை
அராக்சி ஷேர் செய்த அறிக்கை

பதிவு

இந்த அறிக்கை குறித்து, “கட்டுக்கதை: ஈரான் ஆயுதமின்றி நிற்பதாகக் கூறுவது.

உண்மை: நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ மையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பல போர் விமானங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: பென்டகன்)

இது வெறும் தொடக்கம்தான்.

சரியான நேரத்தில் அனைத்து உண்மையையும் வெளிப்படுத்துவோம்.

ஈரானைப் பற்றிப் பொய்யான கதைகளைப் பரப்பியவர்களுக்கு, இதன் முடிவு நிச்சயம் இனிமையாக இருக்கப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார் அராக்சி.

'வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?'- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை ... மேலும் பார்க்க

`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் ... மேலும் பார்க்க

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆ... மேலும் பார்க்க

"அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை" - சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில், ரமேஷ் சென்னித்தலாவுடன் இருக்கும் புகைப்படங்களை அங்குள்ள வெளிநாடு வாழ் கேரளத்தவர்களும், கேரள எம்.எல்.ஏ... மேலும் பார்க்க

`மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் அரசியல்' - அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் சுப்புலெட்சுமி, டாக்டர்.ச... மேலும் பார்க்க