செய்திகள் :

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி - கண்ணீரில் தெஹ்ரான்

post image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி காமனியின் இறுதிச் சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை துவங்கின.

ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த இறுதிப் பயணத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பங்கேற்று தங்கள் 86 வயது தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தெஹ்ரானில் உள்ள பிரம்மாண்டமான கிராண்ட் மொசல்லா வளாகத்திற்குள் காமெனெயியின் சவப்பெட்டி கொண்டுவரப்பட்டது. இஸ்லாமியக் குடியரசின் கொடியால் போர்த்தப்பட்டு, அதன் மேல் அவரது கருப்பு தலைப்பாகை வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அவரது உறவினர்களின் உடல்களும் அருகே வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, அவரது 14 மாதப் பேரக்குழந்தையான ஜஹ்ரா முகமதி கோல்பயேகானியின் சிறிய சவப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது காண்போரை கலங்கச் செய்தது.

இந்த இறுதி நிகழ்விற்காக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வளாகத்திற்கு வெளியே காத்திருந்தனர். அடுத்த மூன்று நாட்களில் தெஹ்ரானில் மட்டும் சுமார் 1.5 முதல் 2 கோடி மக்கள் பங்கேற்பார்கள் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாஃப், கண்ணீர் மல்கக் காணப்பட்டார்.

காமனியியுடன் கொல்லப்பட்ட புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தளபதிக்குப் பதிலாக, அப்படையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அகமத் வஹிதியும் அஞ்சலி செலுத்தினார்.

இந்த இறுதி நிகழ்வில், இந்தியாவின் சார்பில் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

திட்டத்தின்படி, காமெனெயியின் உடல் திங்கட்கிழமை வரை தெஹ்ரானில் வைக்கப்பட்டு, பின்னர் நகர்வலம் நடைபெறும். செவ்வாயன்று மத முக்கியத்துவம் வாய்ந்த கோம் நகருக்கும், புதன்கிழமை அண்டை நாடான ஈராக்கின் புனித நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படும். இறுதியாக, வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான வடகிழக்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த இறுதி நிகழ்வுகள், ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

"Right Party, Wrong Leader"- அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வைகைச்செல்வன் விளக்கம்

அதிமுகவில் இருந்து விலகிய வைகைச்செல்வன் முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்திருக்கிறார். தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய வைகைச்செல்வன், "ஒரு உப்பை போல சுத்தமான தலைவராக இருப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம்: ஆளுநரிடம் திமுக நேரில் புகார்!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் குதிரை பேரமும், அதிகார துஷ்பிரயோகமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறு... மேலும் பார்க்க

'தவெகவின் குதிரை பேரத்தை பார்த்து ஆளுநர் அமைதியாக இருப்பது ஏன்?'- அதிமுக எம்.பி இன்பதுரை

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து புகார் அளித்திருக்கின்றனர். குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறு... மேலும் பார்க்க

``லஞ்சம் வாங்கி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள்; இதுதான் தூய சக்தி ஆட்சியா?" - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அதன் ஆட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளன... மேலும் பார்க்க

"இது RSS-ன் வெறுப்பரசியல்" - விஸ்வநாதன் மீதான புகாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று (ஜுலை.4) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், "கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்... மேலும் பார்க்க

திருவாரூர்: குட்கா விற்க லஞ்சம்; 2 ஆண்டுகளாக மாதம் ரூ.5,000 வாங்கிய 2 போலீஸார் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா, அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.இவர் கடையில் சட்ட விரோதமாக குட்கா,பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போ... மேலும் பார்க்க