செய்திகள் :

ஆட்சி மாற்றத்தால் காவல்துறையில் நிகழவிருக்கும் அதிரடி: பதவிக்காக காய்நகர்த்தும் அதிகாரிகள்!

post image

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பவர்ஃபுல் பதவிகளைப் பெற காயை நகர்த்தி வருகின்றனர். தற்போது முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் புதிய ஆட்சி அமைந்ததும் அந்த அதிகாரிகளில் பலர் இடமாற்றம் செய்யப்படுவார்கள். தமிழக காவல்துறையை பொறுத்தவரை இதுவரை தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு விசுவாசமான அதிகாரிகளே இருந்தனர். முதல் தடவையாக த.வெ.க -வுக்கு விசுவாசமான அதிகாரிகள் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் எனக் கருதப்பட்ட சிலர், த.வெ.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மூலம் பவர்ஃபுல் பதவிகளைப் பெற முயற்சி செய்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோரும் விஜய்க்கு ஆதரவான நிலைபாட்டிலேயே இருந்து வருகிறார்.

தவெக தலைவர் விஜய்

அதனால் புதிய ஆட்சி அமைந்ததும் அவரே தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக தொடர அதிக வாய்ப்புள்ளது. இதைபோல தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள், உளவுத்துறை ஐ.ஜி ஆகியோரும் புதிய ஆட்சி அமைந்ததும் இடமாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் த.வெக 108 இடங்களைப் பிடித்ததும் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்யின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேலூர் டி.ஐ.ஜியாக இருந்த தர்மராஜனை சென்னைக்கு ஸ்பெஷல் டூயூட்டியாக வரும்படி டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. உடனடியாக அவரும் சென்னை வந்து விஜய்யின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் இடமாற்றப்பட்ட கமிஷனர் ஒருவரை (ஏடிஜிபி) உளவுத்துறைப் பணிகளை மேற்கொள்ளும்படி டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து அழைப்பு சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவரும் டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து உளவுத்துறை பணிகளை சீக்ரெட்டாக செய்து வருகிறார். அவருக்கு கீழ் எஸ்.பி அந்தஸ்தில் இரண்டு அதிகாரிகளும் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தவெக விஜய்
தவெக விஜய்

புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதும் இவர்களுக்கான ஆர்டர் வெளிவரும் என டி.ஜி.பி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக ஏற்கெனவே உளவுத்துறையில் பணியாற்றி வருபவர்களும் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய போலீஸ் கமிஷனர் பதவிகளை குறிவைத்து சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் காயை நகர்த்தி வருகிறார்கள். இதற்காக அந்த அதிகாரிகள் விஜய்யுடன் நெருக்கத்திலிருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க