செய்திகள் :

ஆமைவேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டம்?

post image

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், 2033-தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முதல் புல்லட் ரயிலுக்கான பணிகள் 47 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாகக் கூறினர்.

508 கி.மீ. தொலைவிலான இந்தத் திட்டத்தில், 255 கி.மீ. தொலைவிலான பாலப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம், 2026-ல் செயல்படுத்தப்படவிருந்த புல்லட் ரயில் திட்டம், 2033 ஆம் ஆண்டில்தான் செயல்படுத்தப்படும் என்று தோன்றுகிறது.

இதையும் படிக்க:விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 508 கி.மீ. தொலைவிலான மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடத்தின் 12 ரயில் நிலையங்களில் 8 நிலையங்கள் குஜராத்திலும் 4 நிலையங்கள் மகாராஷ்டிரத்திலும் இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த ரயில்கள் 320 -350 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.

நோய்த்தொற்று, நிலங்களைக் கையகப்படுத்துதல், கொள்கை ஒப்புதல்கள் முதலானவற்றால்தான் புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்படுவதுபோலத் தெரிகிறது.

தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்

உத்தரப் பிரதேச மாநிலம் மில்கிபூர் இடைத்தேர்தலில் ஆளும் பாஜவுக்காக இலக்கு நிர்ணயித்து போலி வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிகள் மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பார்க்க

உணவு டெலிவரி போல இனி கார் டெலிவரி! விரைவில் அறிமுகம்

இன்றைய நவீன காலத்தில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் விதமாக, வீட்டிலிருந்தவாறே உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றி இனிமேல் புதிய கார் வாங... மேலும் பார்க்க

விமான நிலையக் காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் வ... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்கா; பிரதமர் மோடி மௌனம்! காங்கிரஸ் குற்றச்சாடு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நாடு கடத்... மேலும் பார்க்க

ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

அலுவலக சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அல... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்த ராணுவ விமானம்

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் இன... மேலும் பார்க்க