செய்திகள் :

ஆமைவேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில் திட்டம்?

post image

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், 2033-தான் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முதல் புல்லட் ரயிலுக்கான பணிகள் 47 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாகக் கூறினர்.

508 கி.மீ. தொலைவிலான இந்தத் திட்டத்தில், 255 கி.மீ. தொலைவிலான பாலப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம், 2026-ல் செயல்படுத்தப்படவிருந்த புல்லட் ரயில் திட்டம், 2033 ஆம் ஆண்டில்தான் செயல்படுத்தப்படும் என்று தோன்றுகிறது.

இதையும் படிக்க:விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 508 கி.மீ. தொலைவிலான மும்பை – அகமாதாபாத் புல்லட் ரயில் தடத்தின் 12 ரயில் நிலையங்களில் 8 நிலையங்கள் குஜராத்திலும் 4 நிலையங்கள் மகாராஷ்டிரத்திலும் இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த ரயில்கள் 320 -350 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.

நோய்த்தொற்று, நிலங்களைக் கையகப்படுத்துதல், கொள்கை ஒப்புதல்கள் முதலானவற்றால்தான் புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்படுவதுபோலத் தெரிகிறது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பிக்க பிப். 21 வரை அவகாசம்!

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் அளித்து மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது. முன்பு பிப். 11ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க