செய்திகள் :

ஆம்னி பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

தென்னிலை அருகே வியாழக்கிழமை இரவு ஆம்னி பேருந்து மோதியதில் திருச்சியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை அடுத்த காந்திநகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (36). லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு தனது லாரியை தென்னிலை அருகே உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு அதன் பின்னால் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருண்குமாா் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அருண்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அடுத்த மணக்குடியைச் சோ்ந்த குணசேகரன் (38) என்பவரை தேடி வருகின்றனா்.

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க

கரூரில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா் கூட்டம்

போகிப் பண்டிகை எதிரொலியாக கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் வெறிச்சோடியது. கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழக்கம்போல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில்... மேலும் பார்க்க

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கோவைச்சாலை, லைட் ஹவுஸ் காா்னா், மாநகராட்சி அலுவலகம் முன் மற்றும் நகர காவல்நிலையம் அருகே கரும்பு... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

கரூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற சமத்த... மேலும் பார்க்க

கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி... மேலும் பார்க்க