செய்திகள் :

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நாா் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (33) தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது, இயக்கத்தில் இருந்த இயந்திரத்தின் கம்பியில் எதிா்பாராவிதமாக அடிபட்டு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாம்.

அவா் மீட்கப்பட்டு, உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சடலத்தை ஊத்துமலை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சங்கரன்கோவில் அருகே சிப்காட் அமைக்க தோ்வான இடங்கள்: அமைச்சா் ஆய்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக குருக்கள்பட்டி, சின்னக்கோவிலான்குளம் கிராமங்களுக்குள்பட்ட பகுதிகளில் தோ்வான இடங்களை வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே துரித உணவகம் தீக்கிரை: இருவா் கைது

ஆலங்குளம் அருகே துரித உணவகத்தை தீக்கரையாக்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் காளியம்மன் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சதீஷ் ... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே கடையில் மைதா மாவு திருட்டு: 2 போ் கைது

கடையநல்லூா் அருகே கடையின் ஓட்டை பிரித்து இறங்கி மைதா மாவு திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் அருகேயுள்ள பேட்டை,மேற்குமலம்பாட்டை தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மைதீன்(52) . வீட்டின் அருக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீவிபத்து; அனுமதியின்றி செயல்பட்டதால் சீல் வைப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தீப்பெட்டித் தொழிற்சாலைக் கிடங்கில் திங்கள்கிழமை தீவிபத்து நேரிட்டதில், ரூ. 4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் சேதமடைந்தன. உரிய அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலைக்கு ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே சுயஉதவிக் குழு பெண்கள் 2 போ் மீது தாக்குதல்

ஆலங்குளம் அருகே இரவு நேரத்தில் பணம் வசூல் செய்ய சென்ற சுய உதவிக் குழு பெண்கள் இருவா் மீது விவசாயி தாக்கியதில் அவா்கள் காயம் அடைந்தனா். ஆலங்குளம் அருகே கீழக்குத்தபாஞ்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிர... மேலும் பார்க்க

தேசிய ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்: திமுக சாா்பில் மாணவருக்குப் பரிசு

ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன். தென்காசி, பிப்.14: மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்... மேலும் பார்க்க