செய்திகள் :

'இடஒதுக்கீடு குறித்த பேச்சு?' - எம்.ஜி.ஆர் சந்தித்த மிகப்பெரிய தோல்வி பற்றி தெரியுமா? | Vote Vibes

post image

தமிழக அரசியலில் தோல்வியே காணாதவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பயணத்தில் ஒரு தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறார். அது எப்போது தெரியுமா?

திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972-ஆம் ஆண்டு, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக-வைத் தொடங்குகிறார்.

முதல்வர் அரியணையில் எம்.ஜி.ஆர்

கட்சியைத் தொடங்கிய அவர் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்து முதல்வர் அரியணையில் அமர்ந்தார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்றாவது வருடத்தில், 1980-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் திமுக, இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அதிமுக, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தைச் சந்தித்தது.

படுதோல்வி

இந்த நாடாளுமன்றத் தேர்தல்தான் எம்.ஜி.ஆருக்குத் தோல்வியைக் கொடுத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக மொத்தமாகவே இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஒன்று கோபிச்செட்டிப்பாளையம். மற்றொன்று சிவகாசி. அதேசமயம் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸ் 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

தோல்விக்கானக் காரணம்

அதேபோல, திமுக 16 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.

1980 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவது குறித்து எம்.ஜி.ஆர் பேசியதுதான் இந்தத் தோல்விக்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க

Election 2026: பதவிக்காக பகையாகிறதா அப்பா - மகன் உறவு; தகிக்கும் தமிழக அரசியல் களம்

'தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்பார்கள். தமிழக அரசியல் களத்தில் இந்தப் பழமொழியை இப்போது கொஞ்சம் மாற்றி 'தகப்பனும் பிள்ளையும்' எனச் சொல்லலாம். வடக்கே மறைந்த முலாயம் சிங் யாதவ் ... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' - விசிக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்த திருமா, பிறகு விலகினார... மேலும் பார்க்க