செய்திகள் :

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

post image

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கந்தனேரியில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

அதில், வேலூர் மாவட்டத்துக்குஉட்பட்ட 5 தொகுதிகளின் வேட்பாளர்களான காட்பாடி - தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் - ப.கார்த்திகேயன், அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார், கே.வி.குப்பம் - மருத்துவர் எம்.ராஜேஸ்வரி, குடியாத்தம் - கே.பி.பிரதாப் ஆகியோரை ஆதரித்து பேச உள்ளார் ஸ்டாலின். முன்னதாக, இன்று காலை கே.வி.குப்பம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின், வீடு வீடாகச் சென்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மு.க.ஸ்டாலின்

அப்போது, `கலைஞர் கனவு இல்லம்’ திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்குள் சென்ற ஸ்டாலினிடம், `கலைஞர் மகளிர் உரிமை’ திட்டத்திலும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், தனது பிள்ளைகளும் காலை உணவு திட்டத்தில் பயனடைவதாகவும் வீட்டு உரிமையாளரான பெண் பயனாளி தெரிவித்து மகிழ்ந்தார். அவரிடம், `அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ என்று ஸ்டாலின் கேட்டார். அப்போது, வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் உடனிருந்தார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ``தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த `டிஸ்கஷன்’ தான் ஓடுகிறது. வீட்டுக்குத் தேவையான எந்த பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் `சாய்ஸ்’ ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் இல்லத்து அரசிகள், குடும்பத்தலைவிகள்’’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்... மேலும் பார்க்க

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி - பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில ... மேலும் பார்க்க

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' - பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூரில் விஜய்யை 1 லட்சம் வாக்குகள் பெற வைப்போம் என டார்கெட் நிர்ணயித்து தொகுதிக்குள் தவெகவினர் பணியாற்ற... மேலும் பார்க்க

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க