செய்திகள் :

'இந்தியா' தான் காரணமா? T20 உலக கோப்பையில் கலந்துகொள்ளாத வங்கதேசம்; இந்தியா, ICC மீது கடும் சாடல்

post image

வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதில் இருந்து, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்து டி-20 உலகக் கோப்பை நடக்க உள்ளது. இதில் இந்தியாவில் நடக்கும் வங்கதேச போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றக் கூறி வங்கதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

இதற்கு வங்கதேச வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஃபேன்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பது காரணமாக கூறப்பட்டது.

இந்தியாவில் அப்படி ஒன்றும் ஆபத்தில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இதனால், வங்கதேச அணி வருகிற டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம்.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறுவதாவது…

“நாங்கள் டி-20 உலகக் கோப்பையில் கலந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியாவில் நடக்க உள்ள போட்டிகளை இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாற்றித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் எங்களுக்கு அச்சுறுத்தல் என்பது உண்மை தான். இதை நாங்கள் யூகத்தின் அடிப்படையில் கூறவில்லை.

எங்களுக்கு உலகக் கோப்பை விளையாட வேண்டும்… ஆனால், இந்தியாவில் விளையாடத் தயாராக இல்லை.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தொடர்ந்து பேசுவோம்.

முஸ்தஃபிசுர் ரஹ்மான்
முஸ்தஃபிசுர் ரஹ்மான்

முஸ்தஃபிசுர் விஷயம் தனிப்பட்ட விஷயம் அல்ல. இந்தியா தான் அதில் முக்கியமாக முடிவு எடுத்தது.

இந்தியாவில் இருந்து போட்டியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துவிட்டது.

உலக கிரிக்கெட்டின் புகழ் இப்போது எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. அதன் புகழ் மங்கிக் கொண்டே போகிறது.

அடுத்து கிரிக்கெட் ஒலிம்பிக்ஸிற்கு செல்லப்போகிறது. எங்களைப் போன்ற ஒரு நாடு அதில் கலந்துகொள்ளவில்லை என்றால், அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு தான் தோல்வி”. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

T20 WC: `என்னா மேட்ச்!' - இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப்... மேலும் பார்க்க

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்... மேலும் பார்க்க

Shubman: 'அவரின் எளிமையைக் கண்டு வியந்தேன்'- சுப்மன் கில்லை பாராட்டிய இங்கிலாந்து கால்பந்து வீரர்

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில... மேலும் பார்க்க

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்... மேலும் பார்க்க

T20: 'இது' தான் என்னை மீண்டும் சூர்யாவாக்கியது! - IND Vs USA வெற்றிக்குப் பின்‌ சூர்யகுமார்‌ யாதவ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணி... மேலும் பார்க்க

'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் ... மேலும் பார்க்க