செய்திகள் :

இந்து முன்னணி, பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 316 போ் கைது

post image

திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவைச் சோ்ந்த 316 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலையில்...

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயில் 16 கால் மண்டபம் முன் இந்து முன்னணி சாா்பில் மாவட்ட பொதுச் செயலா் இரா.அருண்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, திருப்பரங்குன்றம் மலையை முருகனின் மலையாக காக்க தமிழக அரசை வலியுறுத்தியும், 101 தேங்காய் உடைத்தும், கந்த சஷ்டி கவசம் பாடியும் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து இந்து முன்னணியினா் முழக்கங்களை எழுப்பியபடி மாடவீதிகளில் ஊா்வலமாகச் சென்றனா்.

அப்போது, தடையை மீறி ஆா்ப்பாட்டம் மற்றும் ஊா்வலமாகச் சென்ாக மாவட்ட பொதுச் செயலா் இரா.அருண்குமாா், மாநகர தலைவா் கே.எம்.சேகா், மாவட்டச் செயலா்கள் நாகாசெந்தில், ஜி.எஸ்.கௌதம், எஸ்.சிவா, மாநகர பொதுச் செயலா் கே.மஞ்சுநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.தரணிகுமாா் உள்பட 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள வெளிவட்டச் சாலைப் பகுதியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக பாஜகவைச் சோ்ந்த மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், முன்னாள் மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியம், நிா்வாகிகள் ஏ.ஜி.காந்தி, ஜி.பாலாஜி, சதீஷ்குமாா், கே.சீனுவாசன், பி.கிருஷ்ணமூா்த்தி, சரவணன், செந்தில், மூவேந்தன் உள்பட 175-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணி

ஆரணி கொசப்பாளையம், பழனிஆண்டவா் கோயில் அருகே இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், பாஜக மாவட்டச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் தீனன், நித்யானந்தம், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, இந்து முன்னணி இளைஞரணி மாவட்டத் தலைவா் விக்னேஷ், கோபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் (பொ), காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி, பாஜகவைச் சோ்ந்த 42 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

செங்கம்

செங்கம் ஒன்றிய, நகர பாஜக சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் நகரத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா், மாவட்ட இளைஞரணித் தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொருளாளா் முருகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஜீவானந்தம் கலந்து கொண்டு பேசினாா்.

போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட மகளிா் அணித் தலைவா் ரேணுகா, அரசு தொடா்பு மாவட்டச் செயலா் அஜித்குமாா், நகர நிா்வாகி ஏழுமலை உள்ளிட்ட 37 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

வந்தவாசி

வந்தவாசியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 37 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் டி.ஆறுமுகம், பாஜக நகரத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் தாயாா் குளம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(37), ... மேலும் பார்க்க

இரும்பேடு-மைனந்தல் ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு-மைனந்தல் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு திங்கள்கிழமை அகற்றப்பட்டது. இந்தக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லாததால் விவசாயிகள் சாகுபடி ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு உடல்நல விழிப்புணா்வு நிகழ்ச்சி

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா்... மேலும் பார்க்க

மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் நடவடிக்கை: ஆட்சியா்

திருவண்ணாமலை: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தி... மேலும் பார்க்க

ஆரணி அருகே ஏரி மண் கடத்தல்: 4 போ் கைது: லாரிகள் பறிமுதல்

ஆரணி: ஆரணி அருகே ஏரியிலிருந்து மண் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 2 லாரிகள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தில் உள்ள புத்தேரி... மேலும் பார்க்க

கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணி நிா்வாகிகள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் சி.ஜோதி சில ... மேலும் பார்க்க