செய்திகள் :

`இந்த ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்!' - திருமாவளவன் திட்டவட்டம்

post image

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் திமுக - விசிக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாகவும், தேவையற்ற வதந்திகளுக்கு விசிக தோழர்கள் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``குன்னத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததை அறிந்து, அதைத் தவிர்க்குமாறு நான் முன்னரே அறிவுறுத்தியிருந்தேன். மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள் அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தகவல் சரியாகப் போய்ச் சேராததால் சில வி.சி.க தோழர்களும், அதேபோல தி.மு.க-வினரும் அங்கே கூடியுள்ளனர்.

மல்லுக்கட்டிய திமுக - விசிக
மல்லுக்கட்டிய திமுக - விசிக

இதனாலேயே இந்த விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. இனிவரும் காலங்களில் நமது இயக்கத் தோழர்கள் இதுபோன்ற மோதல்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.

அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைபவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்கவுமே இடதுசாரிகளுடன் இணைந்து வி.சி.க இந்த ஆட்சிக்கு ஆதரவளித்தது.

ஆரம்பத்தில் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவே முடிவெடுத்திருந்தோம். ஆனால், காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தல் வரை மட்டுமே கூட்டணி என்று அறிவித்ததாலும், இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாலும், ஆட்சிக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற ஐயம் ஆளும்கட்சித் தலைமைக்கு இருந்தது. மெஜாரிட்டி குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க-விலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன.

எங்களைப் போன்ற தோழமைச் சக்திகள் இருக்கும் வரை இந்த ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு த.வெ.க தலைமை திறம்பட ஆட்சி நடத்த வேண்டும்.

முதல்வர் ஜோசப் விஜய்

இந்த ஐயத்தின் காரணமாகவே வி.சி.க மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு அவர்கள் அழைத்தனர். அந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு, தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்கும் முடிவை எடுத்தோம்.

மெஜாரிட்டியைத் தக்கவைக்க, அ.தி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களைத் த.வெ.க-வில் இணைத்துக் கொள்வது, ஆளும்கட்சியின் மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கும். எதிர்கால அரசியலுக்கு இது நல்ல அறிகுறி அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளை த.வெ.க தலைமை ஊக்கப்படுத்தக் கூடாது.

தமிழ்நாடு வரலாற்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என்றாலும், கர்நாடகாவில் ஏற்கனவே 6 முதல் 7 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். சிலருக்கு அமைச்சர் பதவி வழங்குவது மட்டுமே அந்த சமூகத்திற்கான ஒட்டுமொத்த அரசியல் முன்னேற்றமாகி விடாது. எனினும், அந்த சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சியே" என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க