செய்திகள் :

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்

post image

பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர்.

விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், "எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்சர். உண்மையில் அவர் ஆசான்களுக்கெல்லாம் ஆசான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் 1995-ல் அவருடைய 'இருத்தலியலும் மார்க்சியமும்' என்கிற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை எனக்குள் உருவாக்கத் தொடங்கினேன்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்

தமிழில் எத்தனையோ நாவல்கள், சிறுகதைகள் படித்துக்கொண்டிருந்தாலும், அவற்றை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கான ஒரு பிளாட்ஃபார்மை எனக்கு வழங்கியது அந்தப் புத்தகம்தான். ஒரு தத்துவம் உருவாவதற்கு என்னவெல்லாம் தேவை என்பதை அந்தப் புத்தகம் எளிமையாகச் சொல்லிக்கொடுத்தது.

சமீபத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்தேன். ' வீரம் விளைந்தது ' ரஷ்ய நாவலைப் படித்துதான் அவருக்கு கம்யூனிசத்தில் ஆர்வம் வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். எனக்கும் மிகவும் பிடித்த நாவல் அது. 80 வயதைக் கடந்தும் இன்றும் உலக நடப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். தத்துவத்தை எளிமையாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய அந்த ஞானிக்கு விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்க... மேலும் பார்க்க

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம். அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, 'கலகல'த... மேலும் பார்க்க

`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மேடையில் திருமாவ... மேலும் பார்க்க

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எ... மேலும் பார்க்க

``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா பேச்சு

2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'சாதனைத் தொழில்நுட்பன்' விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...``கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை... மேலும் பார்க்க