`அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்' - நம்பிக்கை விருதுகள் விழாவில் ஜகபர் அ...
"சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..!" - அருணா ஜெகதீசன்
`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025'-க்கான `இரும்பு மனுஷி’ விருதை வின்சென்ட் கிருஷ்ணம்மாளுக்கு வழங்கினார், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன்.
அப்போது பேசிய அவர், ``நான் இதே மேடையில் சில வருடங்களுக்கு முன்பு விருது வாங்கியிருக்கிறேன். அப்போது இருந்த மகிழ்ச்சியைவிட கிருஷ்ணம்மாளுக்கு விருது கொடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

‘சத்தியவான் சாவித்திரி’ கதையைக் கேட்டிருப்போம். இப்போது சாவித்திரியைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நீதிபதிகள் எல்லாவற்றையும் சட்டரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது; மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் ‘சிறை’ படத்தில் இரண்டுவிதமான நீதிபதிகளைக் காட்டுவார்கள். அதில் ரத்தினவேல் பாண்டியன் என்ற கேரக்டர் மனிதாபிமானத்துடன் செயல்படுவார்.
பொதுவாக, ஒரு நீதிபதிபோல் இன்னொருவர் இருக்க மாட்டார். அதனால் கால விரயம் ஏற்படும். ஒவ்வொரு நீதிபதியும் மனிதாபிமானத்துடன் இருந்தால், நீதி விரைவில் கிடைக்கும்’’ என்றார்.

















