செய்திகள் :

`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!

post image

மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரமோஷன் கிடைக்கப் போகிறது' என ஐஸ் வைக்க, மேயர் பிரியா உள்ளர்த்தத்தோடு வெட்கப்பட்டு குலுங்கி சிரித்த சம்பவம், கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாத்திமா
பாத்திமா

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் பேசி முடித்திருந்தனர். அந்த சமயத்தில் IUML கட்சியைச் சேர்ந்த 61 வது வார்டு உறுப்பினர் பாத்திமா எழுந்து பேசுவதற்கு நேரம் கேட்கவே மேயர் பிரியாவும் அவரை பேச அனுமதித்தார்.

IUML கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பாத்திமா தொடர்ந்து, 'இன்னும் இரண்டு மாதத்தில் இந்த அவையில் இருக்கும் பலரும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. அந்தளவுக்கு திறன் படைத்த பலரும் இங்கே இருக்கிறார்கள். என்னால் அவர்களின் பெயர்களை கூட சொல்ல முடியும்' என்றார். உடனே துணை மேயர் மகேஷ் குமார் இடைமறித்து, 'மேயர் பிரியா சிரிக்கிறார் பாருங்கள்' என்றார். உடனே அரங்கமே கலகலப்பானது. 'மேயர் பிரியா என் மகளைப் போன்றவர். சிங்கப்பெண்ணாக அவரை மாநகராட்சியின் மேயர் ஆக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கும் ப்ரமோஷன் கிடைக்கும்' எனக் கூறவே அரங்கத்தில் சிரிப்பலை.

மேயர் பிரியா
மேயர் பிரியா

தொடர்ந்து பேசியவர் தன்னுடைய வார்டின் கோரிக்கைகளை வரிசையாக அடுக்கினார். மீண்டும் இடைமறித்த துணை மேயர் மகேஷ் குமார், 'நல்லா பக்குவமா பேசுறீங்கம்மா...மகள் மாதிரி சிங்க்பெண் மாதிரினுலாம் சொல்லிட்டு நைசா உங்க கோரிக்கையையெல்லாம் அடுக்குறீங்களே..' என்றார். உடனே பாத்திமா, 'அவர் பிரமோஷன் ஆகிப் போவதற்குள் இதையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பார் என நம்புகிறேன்' என்றார் சிரித்துக்கொண்டே. உடனே கூட்டத்திலிருந்த இன்னொரு உறுப்பினர், 'துணை மேயர் அண்ணனும் ப்ரமோஷனுக்குத்தான் ட்ரை பண்றாரு' என கமென்ட் அடிக்க, அரங்கம் மொத்தமும் வெடித்துச் சிரித்தது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேயர் பிரியா சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் பல மாதங்களாகவே அறிவாலய வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க