செய்திகள் :

இன்றுடன் நிறைவு - சென்னை புத்தகக் காட்சி!

post image

நந்தனத்தில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

சென்னை நந்தனத்தில் டிச.27-ஆம் தேதி தொடங்கிய பபாசி-இன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் (ஜன. 12) நிறைவடைகிறது. புத்தகக் காட்சியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகையான தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகக் காட்சி வார நாள்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் நடைபெற்று வந்தது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள புத்தகக் காட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்கிறார்.

புத்தகக் காட்சியின் தேதி நீட்டிக்கப்படுவதாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இருப்பினும், புத்தகக் காட்சி நீட்டிப்பு தேதி குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும், திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமையுடன் புத்தகக் காட்சி நிறைவு பெறுவதாகவும் பபாசி செயலர் முருகன் விளக்கமளித்தார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் வெற்றி: அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!

துபை கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.துணை முதல்வர் உதயநிதி: 2025 துபையில் நடைபெற... மேலும் பார்க்க