செய்திகள் :

"ஈரானை கைப்பற்ற ஒரே இரவு தான் தேவை; அது நாளையாக கூட இருக்கலாம்" - ட்ரம்ப் எச்சரிக்கை

post image

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துக் கொண்டே வருகிறார்.

நேற்று முழுவதும் ட்ரம்ப் ஈரானுக்கு பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அவை என்னென்ன?

> ஒரே இரவில் மொத்த நாட்டையும் (ஈரான்) கைப்பற்றிவிட முடியும். அது நாளை இரவாகக் கூட இருக்கலாம்.

> ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் அழிப்பைத் தாண்டி, இன்னும் கடுமையான பிளான்கள் கூட ஈரானுக்கு எதிராக உள்ளன.

> பல நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த, 45 நாள்கள் தற்காலிக போர் நிறுத்தம் குறித்து பேசுகின்றனர். இது முக்கியமான நகர்வு தான். ஆனால், இது மட்டும் போதாது.

ஈரான் போர்
ஈரான் போர்

> போர் நிறுத்தம் வேண்டுமா... இல்லையா என்பதை நான் ஒருவன் மட்டுமே முடிவு செய்வேன்.

> எனக்கு ஈரான் எண்ணெயை கைப்பற்ற வேண்டும் என்பது ஆசை. ஆனால், அமெரிக்க மக்களுக்கு அது வேண்டுமா என்பது தெரியவில்லை.

அவர்களுக்கு அமெரிக்கா அந்த நாட்டிற்குள் செல்ல வேண்டும். வேண்டியதை செய்துவிட்டு, வெளியேறிவிட வேண்டும். அவ்வளவு தான்.

ட்ரம்ப் குறித்திருக்கும் இரவு அமெரிக்க நேரப்படி இன்று இரவு தான். என்ன நடக்கிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

`ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்..!'- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் ... மேலும் பார்க்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சோசியல் மீடியா முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்திற்கு இந்த சோசியல் மீ... மேலும் பார்க்க

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்?

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இடைத்தேர்தலில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி; எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ்

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் பிப்ரவரி இறுதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அஜித்பவார் வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை ம... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் இருக்கும் பயணிகள்

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், தற்போது கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் ... மேலும் பார்க்க

`பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடிமை பழனிசாமி, புதுச்சேரியில் ரங்கசாமி!’ - கடுகடுத்த ஸ்டாலின்

``ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள்...”இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று மாலை புதுச்சேரி வந்த முதல்வர் ஸ்டாலின், ``தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் எப்போதும்... மேலும் பார்க்க