செய்திகள் :

மகாராஷ்டிரா: இடைத்தேர்தலில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி; எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ்

post image

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் பிப்ரவரி இறுதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அஜித்பவார் வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதோடு அஜித்பவாரின் தொகுதியான பாராமதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் சுனேத்ரா பவாரைப் போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி செய்தன.

முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) தாங்கள் சுனேத்ரா பவாரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டது. சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேயை சுனேத்ரா பவார் போனில் தொடர்பு கொண்டு இத்தேர்தலில் தனக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அஜித்பவார் மகன் பார்த் பவார்
அஜித்பவார் மகன் பார்த் பவார்

உத்தவ் தாக்கரேயும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியை சுனேத்ரா பவாரால் சரிக்கட்ட முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆகாஷ் மோரே என்பவரை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. இது தவிர வேறு சில வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர். இத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அஜித்பவார் மகன் பார்த் பவார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தி தவறு செய்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் அதன் முடிவெடுக்கும் திறனைப் பிரதிபலிக்கிறது. இந்த முடிவு மாநிலத்தில் காங்கிரஸின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கும். நாங்கள் போட்டியிலிருந்து விலகும்படி கேட்டு யாருக்கும் எந்தத் தொலைபேசி அழைப்பையும் செய்யப் போவதில்லை'' என்று தெரிவிக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளரைப் போட்டியில் இருந்து வாபஸ் பெறச்செய்ய டெல்லி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.

சுனேத்ரா பவார் வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகு அளித்த பேட்டியில், "இதுபோன்று இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டிய ஒரு நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. பாராமதி மக்களுக்குச் சேவை செய்ய அஜித் தாதாவின் பாரம்பர்யத்தைத் தொடர எனது தனிப்பட்ட இழப்பைச் சமாளிக்க முயற்சித்தேன்'' என்று தெரிவித்தார்.

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் அவர் மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்தத... மேலும் பார்க்க

`ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்..!'- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் ... மேலும் பார்க்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சோசியல் மீடியா முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்திற்கு இந்த சோசியல் மீ... மேலும் பார்க்க

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்?

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் இருக்கும் பயணிகள்

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், தற்போது கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் ... மேலும் பார்க்க

`பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடிமை பழனிசாமி, புதுச்சேரியில் ரங்கசாமி!’ - கடுகடுத்த ஸ்டாலின்

``ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்திருக்கிறார்கள்...”இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று மாலை புதுச்சேரி வந்த முதல்வர் ஸ்டாலின், ``தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கும் எப்போதும்... மேலும் பார்க்க