செய்திகள் :

ஈரோடு: "கிட்னியை விற்று கடனைக் கட்டு" - எஸ்.பி அலுவலகத்தில் கதறிய பெண்; பாஜக நிர்வாகி கைது

post image

ஈரோடு மாவட்டம் கொங்கு ஸ்கூல் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான சுகுணா. அசோகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம் 2024-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக வட்டிக்கு பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார்.

வட்டியுடன் கடன் தொகையைத் திரும்ப செலுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், கடன் தொகையை முழுவதுமாகத் திரும்ப செலுத்தியும், மீட்டர் வட்டி என்கிற பெயரில் கூடுதல் தொகையைக் கேட்டு கிருஷ்ணகுமார் மிரட்டுவதுடன் ஒரு கிட்னியை விற்று கடைனை அமைக்குமாறு வற்புறுத்தி வருவதாகக் கூறி ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று காலை புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகுமாரைக் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "சுகுணாவின் கணவர் இறந்த நிலையில், பண தேவைக்காக பா.ஜ.க நிர்வாகி கிருஷ்ணகுமாரிடம் 2 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைத் திரும்பக் கொடுத்திருக்கிறார். மீட்டர் வட்டி கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்.

தன்னிடம் பணம் இல்லையென பெண் கூறியிருக்கிறார். கிட்னியை வாங்க ஆள் இருக்கிறார்கள். மருத்துவமனையும் தெரியும். கிட்னியை விற்று கடைனை அமைக்குமாறு வற்புறுத்தி யிருக்கிறார். கந்துவட்டி கொடுமை வழக்கில் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளோம்" என்றனர்.

சென்னை: விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச சரக்கு முனையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களில், சரக்கு பார்சல்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க