செய்திகள் :

ஈரோடு:‌ 100 கிலோ சந்தன மரக்கட்டைகளை வெட்டி பதுக்கிய கடத்தல் கும்பல்; வனத்துறையிடம் சிக்கியது எப்படி?

post image

'சந்தனக் காடு' என அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் செழித்து வளரும் பகுதிகளாக உள்ளன.

இந்தக் காடுகளில் காணப்படும் சந்தன மரங்களுக்குச் சட்டவிரோத சந்தைகளில் கூடுதல் வரவேற்பு என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடத்தல் கும்பல்கள் அத்துமீறி நுழைந்து சந்தன மரங்களைக் கடத்திச் செல்கின்றனர்.

வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டும் சந்தன மரக்கடத்தலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.

சந்தன மரக்கடத்தல்
சந்தன மரக்கடத்தல்

இந்த நிலையில், அந்தியூர் பெண் வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தியூர், கிணத்தடி பகுதியில் 2 சந்தன மரங்களை வெட்டிய மர்ம நபர்கள், அதனைக் கடத்திச் செல்வதற்காகப் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 100 கிலோ எடையுள்ள இந்தச் சந்தன மரங்களை வெட்டிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோவிலூரைச் சேர்ந்த சடையன், பிரபு மற்றும் விளாங்குட்டையைச் சேர்ந்த ராசு என்கிற செங்காயன் ஆகிய மூன்று பேரும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கடத்தலை முறியடித்த வனத்துறையினர், மூன்று பேர் மீதும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரண்டு நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ராசுவைத் தேடி வருகின்றனர். சந்தன மரக்கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை: 'முன்விரோதம், போதை, கோபம்' - 18 மணி நேரத்தில் 3 கொடூரக் கொலைகள்; அச்சத்தில் மக்கள்

குடும்பத் தகராறு, ரவுடிகளுக்கிடையேயான முன்விரோதம், போதை மற்றும் எல்லை மீறிய கோபம் என வெவ்வேறு பின்னணிகளில் நடந்த 3 கொடூரக் கொலையால் சிவங்கை மாவட்டமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. "சிறையிலிருந்து வெ... மேலும் பார்க்க

வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் மான்கள்; 'மான் பூங்கா' அமைக்க கோரிக்கை; கைவிரிக்கும் அதிகாரிகள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள கல்லகம் பகுதியில் கலகம் ஏரி உள்ளது. திருச்சி- அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகில் காப்புக் காடுகள் உள்ளதால், அந்தக்... மேலும் பார்க்க

திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட். இவர், முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிரு... மேலும் பார்க்க

கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்... சிகிச்சையில் மக்கள்! - என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (வயது: 65). இவர் மகள் மஞ்சுளா (வயது: 42). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொலைசெய்து உடலின் மீது சர்க்கரை தூவியது ஏன்? - சிக்கிய ஜோடியின் 'பகீர்' வாக்குமூலம்!

ஒரு கொலை... அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம்... ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்... மேலும் பார்க்க

சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் ... மேலும் பார்க்க