செய்திகள் :

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? - 'இந்த' கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

post image

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.

அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், 'கடன்'.

விலைவாசி, லைஃப்ஸ்டைல் மாற்றம் போன்ற காரணங்களால் 'கடன்' வாங்குவது இன்றையக் காலக்கட்டத்தில் சர்வ சாதாரணமாகி விட்டது.

 விஷ்ணு வரதன்
விஷ்ணு வரதன்

முக்கியமாக, இப்போது வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குவதும் எளிதாகிவிட்டது.

இதனால், நிறைய கடன்களை பலர் வாங்கிவிடுகின்றனர். ஆனால், அதை கட்டி முடிப்பதற்குள் அவர்களுக்கு கண்விழி பிதுங்கிவிடுகிறது.

இப்படி வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான சூப்பர் வழியைக் கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.

"இன்டர்நெட், சோசியல் மீடியாக்களைப் போல, இன்றைய காலகட்டத்தில் கடனும் பலருடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது.

இதை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. காரணம், இன்றைய காலகட்டம் அப்படி.

விலைவாசி ஏறுவதுபோல, மக்களுக்கு வருமானம் ஏறுவதில்லை. அதனால், செலவுகளை சமாளிக்க கடன் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

அதனால், கடன் வாங்குவது தவறில்லை. அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டோமா என்பதில் தான் தவறு அடங்கியிருக்கிறது.

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டோமா என்பதை இ.எம்.ஐ கணக்கை வைத்து கணக்கிட்டுவிடலாம்.

கடன்
கடன்

ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கு கடன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கடனுக்கு மாதா மாதம் செல்லும் இ.எம்.ஐ தொகை உங்கள் மொத்த வருமானத்தில் 30 - 40 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது.

ஒரு கடனுக்கு வருமானத்தில் 30 சதவிகித இ.எம்.ஐ, அடுத்த கடனுக்கு 15 சதவிகித இ.எம்.ஐ, மற்றொரு கடனுக்கு 35 சதவிகித இ.எம்.ஐ என்று கணக்கு போடக்கூடாது.

நீங்கள் வாங்கியிருக்கும் மொத்த கடனுக்கு செல்லும் இ.எம்.ஐ மொத்த வருமானத்தில் 30 - 40 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. 30 சதவிகிதத்திற்குக் கீழ் இ.எம்.ஐ இருந்தால், அது சூப்பரோ சூப்பர்.

ஒருவேளை 30 சதவிகிதத்திற்கு மேல் உங்களது இ.எம்.ஐ சென்றால், தின செலவுகளில் நீங்கள் தள்ளாடலாம். சேமிப்பு குறையும். அவசர சூழல்களில் கடன் வாங்கும்போது, உங்கள் தோளில் பெரும் சுமை ஏறிக்கொள்ளும்.

கடன் உங்கள் வாழ்க்கைக்கு உதவுவதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, உளைச்சலாக மாறக் கூடாது".

Personal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்?

இன்றைய இளைஞர்களைப் பற்றி பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால்: “சம்பாதிக்கிறார்கள்… ஆனால் சேமிக்கவே மாட்டார்கள்!”இந்தக் கருத்து ஒரு அளவிற்கு உண்மையைக் கொண்டிருந்தாலும், அதனை முழும... மேலும் பார்க்க

பணம் விஷயத்தில் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர் இருப்பது எப்படி? | பணம் வளர்ப்போம்

குழந்தைகளின் எதிர்காலத்தின் நிதி திட்டமிடலை நாம் மட்டும் சரியாகச் செய்துவிட்டால் போதாது. எதிர்காலத்தைச் சிக்கல் இல்லாமல் கழிக்க நிதி திட்டமிடலை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எ... மேலும் பார்க்க

NRI Corner 11: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே, உஷார்! நீங்கள் சம்பாதிக்கும் பணம் இழப்பதற்கல்ல!

வளைகுடா நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவருடன் சில நாள்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். ''கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களில் பணத்தைப் போட்டுவிட்டேன். ஆனால், அத்தனையும் தவறானவை என்று இப்போதுதான... மேலும் பார்க்க

Labham 4: தங்கத்தில் கிடைத்த லாபத்தை பங்கில் கிடைத்த நஷ்டத்துடன் சரிசெய்து வரியை மிச்சப்படுத்தலாமா?

கடந்த ஆண்டில் தங்கத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்தவர்கள் ஏறக்குறைய 75% வரை லாபம் பார்த்தார்கள். அதாவது, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருவர் தங்க இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திரு... மேலும் பார்க்க

'சிறப்புக் குழந்தை'! எங்களுக்குப் பின் யாரு பாத்துப்பா? கேள்விக்கு பதில்| பணம் வளர்ப்போம்

'நமக்குப் பின் யார்?' என்கிற கேள்வி, சிறப்புக் குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களுக்குமே உண்டு. அந்தக் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டமிடலைப் பற்றி கூறுகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V ... மேலும் பார்க்க

₹25 லட்சம் கையில் இருக்கிறதா? மாதம் ₹10000 பெறலாம் + 25 வருடம் கழித்து ₹45 லட்சம்! எப்படி?

ஒருவரிடம் ₹25 லட்சம் மொத்தமாக (Lumpsum) கிடைத்தால், முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? "இதை எங்கும் விட்டுவிடக் கூடாது, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்" என்பதுதான். முதலீட்டு உலகில் இதை 'Loss Aversion' ... மேலும் பார்க்க