செய்திகள் :

IPL 2026: ஜவ்வு மிட்டாய் போல இழுக்கும் போட்டிகள்; பிசிசிஐ-க்கு கவாஸ்கர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

post image

போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தாலும், ஆட்டத்தின் நேர அதிகரிப்பு என்பது ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கத் தொடங்கியிருக்கிறது.

mi vs rcb match
mi vs rcb match

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி 4 மணி 22 நிமிடங்கள் ஜவ்வாக இழுத்தது.

இதனால், போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் கவாஸ்கர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கவாஸ்கர், "போட்டியின்போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன. மைதானத்தில் தேவையில்லாமல் மாற்று வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் வருவதைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஸ்ட்ராட்டஜிக் டைம்-அவுட் நேரத்தில் மிகக் குறைந்த பேர் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். விக்கெட் விழுந்த பிறகு பேட்ஸ்மேன்கள் வருவதற்கான நேரத்தை இரண்டு நிமிடங்களில் இருந்து ஒரு நிமிடமாகக் குறைக்கலாம்.

டைம்-அவுட் முடிந்ததும் துல்லியமான நேரத்தில் அடுத்த பந்து வீசப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்படுவதால் இரண்டரை நிமிட டைம் அவுட் 3 நிமிடங்களாக அதிகரிக்கிறது.

தற்போது அபராதமாக விதிக்கப்படும் பண அபராதம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

அதற்கு பதிலாக ரன்கள் அல்லது புள்ளிகள் குறைக்கும் தண்டனை பிசிசிஐ விதித்தால் மட்டுமே அணிகள் சீரிய நடவடிக்கை எடுக்கும். போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மைதானம் ஒரு புனிதமான இடம். விளையாடுபவர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் அங்கு செல்லக் கூடாது. இவ்வாறு ஒழுங்குகளைக் கடுமையாகப் பின்பற்றினால் மட்டுமே ஐபிஎல் மேலும் சிறப்பாக, சுறுசுறுப்பாகவும் உலகத் தரத்தில் திகழும்” என்று கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் (ஏப்ரல் 26) லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்... மேலும் பார்க்க

'கடைசி வரை நம்பிக்கையை விடவில்லை'- சூப்பர் ஓவர் வெற்றி குறித்து ரஹானே!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 26) பரபரப்பான ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்த... மேலும் பார்க்க

CSK vs GT: "கணிக்க முடியாத பிட்ச், மந்தமான ஃபீல்டிங்" - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களுக்குப் பெரும்... மேலும் பார்க்க

LSG vs KKR: "தோல்விக்கு எல்லா வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்" - லக்னோ கேப்டன் பண்ட் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டி சமனில் முடிந்தது. இறுதியில் நடைபெற்ற 'சூப்பர் ஓவர்' மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வ... மேலும் பார்க்க

CSK Vs GT: நான்கு வார காத்திருப்பு; 'தோனி விளையாடுவாரா?' - நிலவரம் என்ன?

ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் ரசிகர்களின் ஒட்டுமொத்... மேலும் பார்க்க

"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" - ரெக்கார்ட் சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

"எங்க ஊர்... எங்க கிரவுண்டு... நாங்கதான் முதல்ல பேட்டிங் ஆடுவோம்!" என டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேல் தைரியமாகப் பேட்டிங்கைத் தேர்வு செய்தபோதே தெரிந்தது, இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் ஏதோ ஒன்... மேலும் பார்க்க