செய்திகள் :

உத்தரப்பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த காதலி; கொன்று துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மிங்கி சர்மா(30). இவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென காணவில்லை.

இந்நிலையில் அங்குள்ள யமுனை ஆற்றுப் பாலத்தில் சாக்குமூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இந்தச் சாக்குமூட்டை குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, அதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரது தலையைக் காணவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையைக் கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றது தெரிய வந்தது.

போலீஸார் உடனே வினய் என்ற அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கொலை செய்யப்பட்ட பெண் மிங்கி சர்மா என்று தெரிய வந்தது. மிங்கியும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் வினய் என்பவரும் காதலித்து வந்தனர்.

வினய், மிங்கி
வினய், மிங்கி

இருவரும் ஒரே துறை என்பதால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதில் வினய் தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். ஆனால் இதற்கு மிங்கி சர்மா சம்மதிக்க மறுத்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் இருந்தது.

இதே பிரச்னையில் அவர்கள் தனியாகச் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் வினய் அங்கு இருந்த தேங்காய் உடைக்கும் கத்தியை எடுத்து தனது காதலியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மிங்கி சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து மிங்கியின் உடலைப் பல துண்டுகளாக வெட்டினார். தலையை மட்டும் தனியாக எடுத்து அதனைத் தனியாக ஒரு பிளாஸ்டிக் பேக்கில் வைத்துக்கொண்டார். உடலின் மற்ற பகுதிகளை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு டேப்பால் ஒட்டினார். அதனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி இரண்டையும் எடுத்துக்கொண்டு யமுனை ஆற்றில் போடுவதற்காகச் சென்றார்.

வழியில் தலை இருந்த பிளாஸ்டிக் பேக்கை ஒரு கால்வாயில் போட்டுவிட்டார். எஞ்சிய உடல் பகுதியை யமுனை ஆற்றில் போட எடுத்துச் சென்ற போது பயத்தில் அந்தச் சாக்குமூட்டையை ஆற்றுப்பாலத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. வினயைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

கரூர்: 4 பவுன் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடன்; 20 நிமிடங்கள் போராடிய மூதாட்டி; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி எரம்மாள் (வயது: 75). இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன் தி... மேலும் பார்க்க

'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இரு... மேலும் பார்க்க

வெளிநாட்டில் பதுங்கியுள்ள 60 கேங்க்ஸ்டர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை - கோல்டி பிரர் பெற்றோர் கைது

பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல... மேலும் பார்க்க

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு பலியாகும் தெருநாய்கள் - 1,100 தெருநாய்கள் கொன்று குவிப்பு!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு - இந்தி நடிகர் நதீம் கான் கைது!

பாலிவுட் நடிகர் நதீம் கான் மீது அவரின் வீட்டு வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 40 வயதான அப்பெண் பல பாலிவுட் நடிகர்கள் வீடுகளில் வேலை செய்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மெகா... மேலும் பார்க்க

`ரெளடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய ரௌடி என்கவுண்டர்' - பெரம்பலூர் பரபரப்பு

கடந்த 24-ம் தேதி ரௌடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது... மேலும் பார்க்க