செய்திகள் :

உத்தரப்பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த காதலி; கொன்று துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மிங்கி சர்மா(30). இவரைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென காணவில்லை.

இந்நிலையில் அங்குள்ள யமுனை ஆற்றுப் பாலத்தில் சாக்குமூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இந்தச் சாக்குமூட்டை குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, அதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரது தலையைக் காணவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையைக் கொண்டு வந்து போட்டுவிட்டுச் சென்றது தெரிய வந்தது.

போலீஸார் உடனே வினய் என்ற அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கொலை செய்யப்பட்ட பெண் மிங்கி சர்மா என்று தெரிய வந்தது. மிங்கியும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் வினய் என்பவரும் காதலித்து வந்தனர்.

வினய், மிங்கி
வினய், மிங்கி

இருவரும் ஒரே துறை என்பதால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதில் வினய் தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். ஆனால் இதற்கு மிங்கி சர்மா சம்மதிக்க மறுத்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் இருந்தது.

இதே பிரச்னையில் அவர்கள் தனியாகச் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் வினய் அங்கு இருந்த தேங்காய் உடைக்கும் கத்தியை எடுத்து தனது காதலியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மிங்கி சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து மிங்கியின் உடலைப் பல துண்டுகளாக வெட்டினார். தலையை மட்டும் தனியாக எடுத்து அதனைத் தனியாக ஒரு பிளாஸ்டிக் பேக்கில் வைத்துக்கொண்டார். உடலின் மற்ற பகுதிகளை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு டேப்பால் ஒட்டினார். அதனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி இரண்டையும் எடுத்துக்கொண்டு யமுனை ஆற்றில் போடுவதற்காகச் சென்றார்.

வழியில் தலை இருந்த பிளாஸ்டிக் பேக்கை ஒரு கால்வாயில் போட்டுவிட்டார். எஞ்சிய உடல் பகுதியை யமுனை ஆற்றில் போட எடுத்துச் சென்ற போது பயத்தில் அந்தச் சாக்குமூட்டையை ஆற்றுப்பாலத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. வினயைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க