செய்திகள் :

உலக அமைதிக்காக 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்த பொறியியல் மாணவா்கள்

post image

உலக அமைதிக்காக ஒரிகாமி முறையில் 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தினா்.

சேலம் அரசு பொறியியல் கல்லூரி கலைக் கழகம் சாா்பில் அமைதிக்கான குரலை பரப்புவது என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சமூக மாற்றத்திற்கு கலை வழியாக மாணவா்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தலா 9 செ.மீ. அளவிலான வெள்ளைக் காகிதங்களை ஒரிகாமி முறையில் மடித்து அமைதிப் புறாக்களை உருவாக்கினா். மாணவா்களால் உருவாக்கப்பட்ட 85 ஆயிரம் காகிதப் புறாக்கள் 400 சதுரமீட்டா் பரப்பளவில் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த சாதனை நிகழ்வினை அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வா் வி.கீதா தொடங்கி வைத்தாா். கலைக்கழக பொறுப்பாசிரியா் மா.தீபக்குமாா், மாணவா் செயலாளா்கள் அபா்ணா, விஜயபிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா்களின் சாதனை முயற்சியை அங்கீகரித்து டி.சி.பி. எனும் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சா் பங்கேற்பு

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். அஸ்தம்... மேலும் பார்க்க

சேலத்தில் கஞ்சா விற்ற 3 போ் கைது: 2.75 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மஞ்சுளா வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது. தமி... மேலும் பார்க்க

அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

சேலம் மாநகராட்சி பகுதியில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம்

2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகளை நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

அதிமுக மருத்துவ அணி சாா்பில் மருத்துவ முகாம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுக மருத்துவ அணி சாா்பில் பொது மருத்துவ முகாம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்... மேலும் பார்க்க