செய்திகள் :

உ.பி முசாபர்நகர் நீதிமன்றம்: `4 மாதத்தில் 22 பேருக்கு தூக்குத் தண்டனை' - நடுங்கும் கைதிகள்

post image

தூக்குத்தண்டனை என்பது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு நீதிபதி பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை வழங்கி வருகிறார்.

அங்குள்ள முசாபர்நகர் கோர்ட்டில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக ரவிக்குமார் திவாகர் பொறுப்பேற்றது முதல் 10 வழக்குகளில் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முசாபர்நகரில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மரண தண்டனையை விதித்தார். வழக்கறிஞர் சமீர் சைஃபி கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஏப்ரல் 28 அன்று, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு குற்றவாளிக்கு மே 30ம் தேதியும், அதைத் தொடர்ந்து இரண்டு பேருக்கு ஜூன் 20ம் தேதியும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு குற்றவாளிக்கு ஜூலை 2ம் தேதியும், இரண்டு பேருக்கு ஜூலை 6ம் தேதியும், மேலும் நான்கு குற்றவாளிகளுக்கு ஜூலை 17ம் தேதியும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நடப்பு மாதத்தில் கடந்த 12ம் தேதி ஒரு குற்றவாளிக்கும், கடந்த 13ம் தேதி நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் பரேலி கோர்ட்டில் நீதிபதியாக இருந்தபோது 13 பேருக்கு மரண தண்டனைகள் விதித்த நீதிபதி திவாகர், இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

இதனால் நீதிபதி திவாகர் முன்பு விசாரணைக்கு வந்தால் கைதிகள் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இதே நீதிபதிதான் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் வீடியோ கிராஃபிக் ஆய்வுக்கு 2022-ல் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது கியான்வாபி மசூதி வழக்கில் நாடு முழுவதும் பேசப்படட் நீதிபதி, இப்போது மரண தண்டனை உத்தரவுகள் மூலம் மீண்டும் செய்திகளில் கவனம் பெற்றிருக்கிறார்.

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கர... மேலும் பார்க்க

'நீட் கலந்தாய்வில் தவறாகத் தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு' - உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பிரஜித் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன்னிடம் செல்லுபடியாகும் ஓசிஐ (OCI) அட்டை உள்ளது. நீட் யூஜி 2026 தேர்வில் பங்கேற்று தகுதி பெற்றுள்ளேன். ... மேலும் பார்க்க

பழனி நிலமோசடி விவகாரம்: "அன்வர்தீன் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்"- நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வாதம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீத... மேலும் பார்க்க

'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே... மேலும் பார்க்க

நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்' - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது!அமைதியான வழியில் போராடநீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாக... மேலும் பார்க்க

கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.போராட்டம் தீவிரமட... மேலும் பார்க்க