செய்திகள் :

ஊரக வளா்ச்சி அலுவலா்கள் அடையாள வேலை நிறுத்தம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலா், ஓட்டுநா், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்

பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். ஊராட்சி செயலராகப் பணியாற்றி 1996-க்குப் பிறகு இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவா்களுக்கு ஊராட்சி செயலா் பணிக் காலத்தை 50% ஓய்வூதியத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கணினி உதவியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணிவரன்முறைப்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் தனி ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். தமிழக முதல்வரின் தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந் தழுவிய

அடையள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனா். இதனால், ஊராட்சி ஒன்றிய, ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்தப் போராட்டம் குறித்து, சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை அரசாங்கம் விரைந்து நடத்த வேண்டும். அதற்கான ஊழியா் கட்டமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். 21அம்சக் கோரிக்கைகளில், அரசும், ஆணையரும் ஏற்றுக்கொண்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து அரசாணை வெளியிட வேண்டும். அடுத்த கட்டப் போராட்ட முடிவுகள் குறித்து, வருகிற 15 -ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது

சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிவகங்கை- ... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா். வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்க... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனைவாசல் பகுதி... மேலும் பார்க்க

அரசனேரியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், பு... மேலும் பார்க்க

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ... மேலும் பார்க்க