செய்திகள் :

பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?

post image

'என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்'

பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர்.

இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான்.

தினேஷ் என்பவர் கரூரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஹோட்டலில் நஷ்டம் உண்டாக தனக்குத் தெரிந்த அரசியல்வாதியான ஜான் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, ஹோட்டலை யாருக்காவது குத்தகைக்கு விடுவது குறித்துப் பேசியிருக்கிறார்.

பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார்.

அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ்.

பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ்.

பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. 'என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றும் விரட்டி விட்டாராம்.

தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே 'சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்'எனச் சொல்லி விட்டாராம்.

ராணி

இந்த விவகாரத்தில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் ராணி, அவரது கணவர் பாலாஜி ஆகியோர் தலைமறைவு ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது.

ராணியிடம் இது தொடர்பாகப் பேச தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசுகிறபட்சத்தில் அவரது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

BB Tamil 9: "பிரேக் ஆயிருக்கேன்; உடனே கடந்துபோக முடியாது"- கம்ருதீனால் பார்வதி எமோஷனல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி மு... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்; திருமண தேதியை அறிவித்தார் பிக் பாஸ் ஜூலி

'ஜல்லிக்கட்டு' நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் திரளாக நடந்த போராட்டத்தின் மூலம் மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி.செவிலியராகப் பணிபுரிந்த இவர் அந்தப் போராட்டத்தில் கலந்து க... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 85: ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்க்கவா? - காப்பாத்துங்க மை லார்ட்

தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே.அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பா... மேலும் பார்க்க

BB Tamil 9: "இது ரொம்ப Cheap-ஆ இருக்கு" - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி மு... மேலும் பார்க்க

BB Tamil 9: ``வன்மம் வீழ்த்தப்பட்டது" - பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்தில் விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை விக்ரம் வாசிக... மேலும் பார்க்க

Serial Rewind 2025: சர்ச்சை கிளப்பிய 'இவருக்குப் பதில் இவர்', சங்கத்தை உடைத்த ஆளுங்கட்சி?

2025ல் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.ஒரே இழுவை.. ஓஹோனு வாழ்க்கை!படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் சொந்த ஊரில் இருக்கும் அணைக... மேலும் பார்க்க