செய்திகள் :

'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

post image

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

இந்நிலையில், இன்று காலையில் தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்றனர். ஐம்பது ஐம்பது பேராக குழுக்களாக பிரிந்து அடுத்தடுத்து அறிவாலயம் முன்பிருக்கும் அண்ணா சாலையை மறித்து அமர்ந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறிவாலயத்தின் கதவுகளை மூடி வைத்திருந்த காவல்துறையினர், போராடிய பெண்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 'நாங்க என்ன பாவம் பண்ணோம்? எங்க வேலையைத்தானே கேட்குறோம். 5 மாசமா வேலை இல்லாம சோத்துக்கு கஷ்டப்பட்டு பாருங்க. அப்போதான் எங்க வாழ்க்கை என்னன்னு உங்களுக்குலாம் புரியும்...' என ஆதங்கத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டே பெண்கள் கைதாகி சென்றனர்.

அறிவாலய முற்றுகையை தொடர்ந்து மதியம் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி முன்பும் தூய்மைப் பணியாளர்கள் மனு கொடுத்து போராடியிருக்கின்றனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ரிப்பன் பில்டிங்கில் போராடி கைதான பிறகு, தூய்மைப் பணியாளர்கள் தரப்பை அரசு இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தமா? - மணமகள் யார் தெரியுமா?

இந்தியாவின் பாரம்பரியக் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ரா. இவருக்கும் தொழிலதிபர் ராபர்ட் வத்ரா என்பவ... மேலும் பார்க்க

நாளை கடைசி நாள்! ரேஷன் அட்டையில் இன்னும் கைரேகை பதியவில்லையா? வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது?

ரேஷன் அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். - இது பல மாதங்களாக கூறப்பட்டு வரும் ஒன்று. ஆனால், இன்ன... மேலும் பார்க்க

2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்

ஏ.ஐ, டெக்னாலஜி என ஒரு பக்கம் கலகலக்க, இன்னொரு பக்கம், இந்த ஆண்டு, பல நாடுகளில் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்தன.உலக வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் தான் சமூக, பொருளாதார மற்றும் அரசி... மேலும் பார்க்க

பிம்ப அரசியலின் மறுபக்கம் - தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 2

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜ... மேலும் பார்க்க

Khaleda Zia: 7 முறை சிறை; நாடு கடத்த சதி; யார் இந்த 'ஜனநாயகப் போராளி' கலிதா ஜியா?

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா இன்று காலமானார் என அவரது வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் சிதைவு, மூட்டுவலி, நீரிழிவு நோய், இதயப் பி... மேலும் பார்க்க