செய்திகள் :

திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

post image

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர்.

இன்று இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Represental Images
Represental Images

இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

“டிசம்பர் 27 ஆம் தேதி திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. ரயிலில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறு. முறைத்து பார்த்ததால் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி இல்லை அவர், 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார். ஒடிசாவை சேர்ந்தவர் அவர்.

சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடன் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் நேற்று முன்தினம்( டிச.28) கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் நலமுடன் இருக்கிறார். சொந்த ஊருக்கு செல்லும் போது தாக்குதல் நடந்துள்ளது. சிறுவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்தி, மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பட்டாக்கத்தியால் தாக்கி அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் சிறுவர்கள் மீது அதிகபட்ச தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் இருந்த 4 சிறுவர்களில் 3 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை நீதிபதியின் அறிவுரைப்படி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஐஜி அஸ்ரா கர்க்
ஐஜி அஸ்ரா கர்க்

ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ கஞ்சா கடந்த 6 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. 10 மாத்திரை பிடிபட்டாலும் மெயின் சப்ளையரை தேடி செல்வோம்.

போதைப்பொருள் பயன்படுத்துவதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் ரீல்ஸ்களை கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பார்சலில் வந்த தாலி; ஏற்காட்டில் இளம்பெண்ணை கொன்று வீசிய இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம். இவரது மனைவி சுமதி (25). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ள... மேலும் பார்க்க

வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி!

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. `இதுபற்ற... மேலும் பார்க்க

திண்டுக்கல்: பிரபல நகைக்கடையில் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய ஊழியர்கள்!

திண்டுக்கல்லில் ஸ்ரீ வாசவி தங்க மாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு தணிக்கையாளராக வைஷ்ணவி இருந்து வந்துள்ளார். இவர், கடந்த 02.12.2025ஆம் தேதி தரைத்தளத்தில் உள்ள தங்க நகை (Short Necklace) பிரிவில் உள்ள ந... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் கர்ப்பம்; சிக்கிய சிறுவன், இளைஞர் - என்ன நடந்தது?!

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர்மல்க இளம்பெண்ணின் அம்மா ஒருவர் வந்தார். அவர், போலீஸாரிடம் `என் மகளை ஏமாற்றி சக்திவேல் என்ற இளைஞரும், 17 வயது சிறுவனும் கர்ப்பமாக்கிவிட்ட... மேலும் பார்க்க

`இரவில் பயத்தில் வாழ்கிறோம்' - ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த 19 மாணவிகள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்வதாக நிர்வாகத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இரவு நேரத்தில... மேலும் பார்க்க

மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3.75 கோடி பறிப்பு

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.இதில் தனக்கு தொடர்பு இல்லை எ... மேலும் பார்க்க