செய்திகள் :

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

post image

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், டெல்லி போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் எழுச்சி போராட்டமாக வெடித்திருக்கிறது. இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ``காவல்துறையினர் எவ்வாறு தடியடி நடத்தினார்கள், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள் என்பதற்கான காணொளி ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் தான் மாணவர்கள் இன்னும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். எனவே நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும். அமைதியான பொதுப் போராட்டத்தின் போது, டெல்லி காவல்துறையால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டது மற்றும் நீதிமன்றத்தின் கட்டுப்படுத்தும் தீர்ப்புகள் மதிக்கப்படாதது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து (suo motu) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்." என வாதிட்டனர்.

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்ய காந்த், ``வழக்கு குறிப்பிடும் கட்டத்தில் (mentioning stage) எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள், எந்தக் காணொளியையும் நாங்கள் பார்க்க விரும்பவில்லை" என்று கூறி வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.

ஏற்கெனவே செவ்வாயன்று, நாடாளுமன்றத்தை நோக்கிய 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் போராட்ட பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியது தொடர்பான மனுவை அவசரமாக பட்டியலிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம்

மேலும், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு மனுதாரரிடம், ``இவற்றுக்கெல்லாம் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்" எனக் குறிப்பிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு முன் வழக்கறிஞரால் மீண்டும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், டெல்லி காவல்துறை அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொதுநல வழக்கை இன்றே அவசரமாக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்தச் சம்பவம் முழு நாட்டின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளதாக வழக்கறிஞர் கூறினார். இதையேற்று, வழக்கினை இன்றே விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' - உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: `புதிய அரசின் நிலைப்பாடு என்ன?' - உச்ச நீதிமன்றம் | விசாரணை முழு விவரம்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி குமாரி மகா சபா என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்... மேலும் பார்க்க

எ.வ.வேலு விவகாரம் : `நீங்க ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இதை தானே.!' - நீதிபதிகள் சுவாரஸ்ய கமெண்ட்

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில்,... மேலும் பார்க்க

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை : நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்! - நடந்தது என்ன?

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆவணங்களை வீசி எறிந்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ காவல்துறை அதிகாரிக்கு எதிராக ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்ஜாமீன் கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த ... மேலும் பார்க்க