செய்திகள் :

எ.வ.வேலு விவகாரம் : `நீங்க ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இதை தானே.!' - நீதிபதிகள் சுவாரஸ்ய கமெண்ட்

post image

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது. 

அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

கடந்த 2022-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

ஜூன் 25 அன்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றார். அவர் நாட்டை விட்டு வெளியேறியதால் லஞ்ச ஒழிப்புத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதனை எதிர்த்து எ.வ.வேலு தொடர்ந்த வழக்கில், லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 15-ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்:

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, "வழக்கு விசாரணை தொடங்கிய உடனே எதிர்மனுதாரர் சிங்கப்பூருக்குச் சென்று தங்கிவிட்டார். மனுதாரர் கேட்காத ஒரு கோரிக்கையின் மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது" என வாதாடினார்.

அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் தானே உள்ளது? தற்பொழுது எ.வ.வேலு இந்தியாவிற்குத் திரும்பிவிட்டாரே, அவரிடம் விசாரணை நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியிருக்கும் போது, நீங்கள் தாராளமாக விசாரிக்கலாமே" என்று கேள்வி எழுப்பினர்.

எ.வ. வேலு

கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம்:

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க எ.வ.வேலுவுக்கு உத்தரவிட வேண்டும் என்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவர் ஒத்துழைப்பார் என்று கூறிய பிறகு ஏன் தனியாக உத்தரவிட வேண்டும் எனக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும், எ.வ.வேலுவின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கோரிய போது, "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காது, இக்கோரிக்கையை நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முன்வையுங்கள்" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நீதிபதிகளின் சுவாரசியமான நகைச்சுவை கமெண்ட்:

விசாரணையின் போது எ.வ.வேலு தரப்பில், "நான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதால், மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "நீங்களும் ஆளுங்கட்சியாக இருந்தபோது இதைத்தானே செய்திருப்பீர்கள்!" என்று நீதிமன்ற அறையிலேயே நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்தது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை : நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்! - நடந்தது என்ன?

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆவணங்களை வீசி எறிந்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ காவல்துறை அதிகாரிக்கு எதிராக ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்ஜாமீன் கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய சமையல்காரர்; கைது செய்த சிங்கப்பெண் அதிரடிப்படை

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக ... மேலும் பார்க்க

த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பணம் வழங்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், IPDS நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஊழல் ... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: `உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்!' - மனுவை திரும்ப பெற்ற திமுக

கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சாட்சிகளை திசைதிருப்பும் வகையில் பேசுவதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிம... மேலும் பார்க்க