செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் சாயும் சரத் பவார்? - மகளுடன் சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

post image

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சமீப காலமாக நாடாளுமன்றத்தில் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதற்காக மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கணிசமான எம்.பி-க்களை தங்களது பக்கம் இழுத்துக் கொண்டு வந்துவிட்டனர். இப்போது சரத் பவாரிடம் இருக்கும் எட்டு எம்.பி-க்களுக்கு பா.ஜ.க குறிவைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சரத் பவார் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். சரத் பவாரை பிரதமர் நரேந்திர மோடி வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

அதோடு இருவரும் எதையோ பேசி சிரித்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. நரேந்திர மோடியிடம் சரத் பவார் விவசாயிகள் பிரச்னை தொடர்பான கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை கொடுத்தார். அதோடு தேசியவாத காங்கிரஸின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாகவும் பேசியதாகத் தெரிகிறது.

கடந்த வாரம் மும்பையில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மறைந்த அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அதோடு இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, ``மத்திய அரசு மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கொண்டு வருவதாக இருந்தால், தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவு கொடுப்பது குறித்து எங்களது கட்சி பரிசீலிக்கும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேசமயம் தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து, ஒன்றிணைய வேண்டும் என்று பா.ஜ.க கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி ஒன்று சேர்ந்தால் இரு அணியைச் சேர்ந்த தலா ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஆனால் இரு அணிகளின் இணைப்புக்கு அஜித் பவார் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் சரத் பவார் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அஜித் பவார் குடும்பம் அச்சம் அடைந்துள்ளது.

அடிப்படை வசதிகளற்ற குன்னவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி; 15 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம், 9-ஏ நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட குன்னவயல் கிராமத்தில் 15 ஆண்டுகளாகச் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்... மேலும் பார்க்க

மணமேல்குடி: `உடனே என்னன்னு பாருங்க'- உத்தரவிட்ட ஆட்சியர், அமைச்சர்; சுடுகாட்டுப் பிரச்னைக்கு தீர்வு!

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் சுமார் 30 ஆதிதிராவிடர் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்... மேலும் பார்க்க

Indian Post: 25,000 முதல் 75,000 வரை பரிசு; இந்திய அஞ்சல் துறைக்குப் புதிய அடையாளம் தேடும் போட்டி!

இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை மக்களை இணைக்கும் அஞ்சல் துறைக்கு, இப்போது ஒரு புதிய அடையாளம் தேடும் முயற்சி தொடங்கியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, தனது ... மேலும் பார்க்க

’ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதல்!’ – காங்கிரஸ் கண்டனம்

நீட் தேர்வு குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லியில் பிரதமர் வீடு அருகே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்"- ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடும் கரப்பான் பூச்சி கட்சியின் இள... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" - ஆதவ் அர்ஜுனா

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க