செய்திகள் :

Indian Post: 25,000 முதல் 75,000 வரை பரிசு; இந்திய அஞ்சல் துறைக்குப் புதிய அடையாளம் தேடும் போட்டி!

post image

இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை மக்களை இணைக்கும் அஞ்சல் துறைக்கு, இப்போது ஒரு புதிய அடையாளம் தேடும் முயற்சி தொடங்கியுள்ளது.

மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, தனது மதிப்புகளையும் எதிர்காலப் பார்வையையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய சின்னம் ஒன்றை உருவாக்கும் போட்டியை அறிவித்துள்ளது.

இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை

1854-ல் நவீன அஞ்சல் துறையாக உருவெடுத்த இந்திய அஞ்சல் துறை, 170 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் வாழ்க்கையோடு பயணித்து வருகிறது. கடிதப் பரிமாற்றத்தைத் தாண்டி சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு, பில் வசூல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது.

அதே நேரத்தில், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தனது சேவைகளையும் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்தப் பாரம்பர்யத்தையும் நவீன மாற்றத்தையும் இணைக்கும் வகையில் உருவாகும் சின்னம் அஞ்சல் துறையின் எதிர்கால அடையாளமாக அமைய உள்ளது.

MyGov தளத்தின் மூலம் நடைபெறும் இந்தப் போட்டியில், பொதுமக்கள் அசல் சின்னம் வடிவமைப்பு, அதற்கான பெயர் மற்றும் அதன் கருத்தை விளக்கும் குறிப்பு ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15, 2026 வரை போட்டி நடைபெறுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் சின்னம், விளம்பரங்கள், அஞ்சல் தலைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும்.

இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை

முதல் மூன்று வடிவமைப்புகளுக்கு முறையே ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.

இது வெறும் வடிவமைப்புப் போட்டி மட்டுமல்ல; பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்திய அஞ்சல் துறையின் பாரம்பர்யத்தை, இன்றைய டிஜிட்டல் தலைமுறையுடன் இணைக்கும் புதிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

’ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதல்!’ – காங்கிரஸ் கண்டனம்

நீட் தேர்வு குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லியில் பிரதமர் வீடு அருகே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்"- ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடும் கரப்பான் பூச்சி கட்சியின் இள... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" - ஆதவ் அர்ஜுனா

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "பாதுகாக்க வேண்டியர்களைப் பார்த்தே அஞ்ச வேண்டிய நிலை" - பும்ரா மனைவி கண்டனம்|live Updates

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album

கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளை... மேலும் பார்க்க

சென்னையில் போராடிய மாணவர்கள் கைது: "ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" - உதயநிதி கண்டனம்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க