செய்திகள் :

Ooty: பூச்சிகளால் முடங்கும் இயல்பு வாழ்க்கை; கடையடைப்பு போராட்டம்; என்ன நடக்கிறது ஊட்டியில்?

post image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் புதிதாக பூச்சியினம் ஒன்று குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன.

ஒவ்வொரு வீடுகளிலும் லட்சக்கணக்கில் படையெடுக்கும் பறக்கும் பூச்சிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிகட்டு வருகிறது. கண், காது, மூக்கு எனப் பூச்சிகள் புகுவதால் நடமாடி முடியாமல் திணறி வருகின்றனர்.

புதிதாகக் காணப்படும் இந்தப் பூச்சியினம் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பூச்சிகளைக் கட்டுப்படுத்தாத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து குன்னூர் அருகில் உள்ள சேலாஸ் பகுதி மக்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படையெடுக்கும் பூச்சிகள்
படையெடுக்கும் பூச்சிகள்

இது குறித்து தெரிவித்த வணிகர்கள், "வீடுகள், கடைகள் என ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான பூச்சிகள் பறந்து வருகின்றன. இவைகள் கடிப்பதில்லை என்றாலும், உணவு, குடிநீர் என எல்லாவற்றிலும் விழுகின்றன. இதனால் சாப்பிட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையே முடிங்கி வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அப்போதும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் அடுத்தகட்டப்‌ போராட்டங்களை நடத்துவோம்" என்றனர்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டு வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது.

கோவை: கூண்டில் சிக்காமல் போக்கு காட்டிய காட்டுப்பன்றிகள்; சுட்டுக் கொன்ற வனத்துறை

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

கருமந்தி: மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர் வனத்தில் அரிதாக காணப்படும் கருங்குரங்குகள் | Photo Album

மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கருங்குரங்குகள்கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கருமந்தி)கருங்குரங்குகள் (கர... மேலும் பார்க்க

Kurinji: 'நீலக் கம்பளம் விரித்தார் போல்...' - பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்!

நீலக்குறிஞ்சி மலர்கள் (Strobilanthes)‌ மலையெங்கும் பூத்துக்குலுங்கி நீல நிறத்தில் காட்சியளிப்பதாலேயே நீலகிரி என்று காரணப்பெயரை கொண்டிருக்கிறது நீலகிரி மலை. குறிஞ்சி மலையான இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பூக்... மேலும் பார்க்க

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் அதிகளவில் அரிதான நீர் வாத்துகள் | Photo Album

கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வ... மேலும் பார்க்க

திருச்சி தீரன்நகர்: குவியும் குப்பை... பாழாகும் கோரையாறு - சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காணப்படுமா?

திருச்சி தீரன்நகர் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியை முக்கிய சாலையுடன் இணைக்கும் பாலம், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும், அருகிலுள்ள தமிழ்நாடு அரசு பஸ் டிப்போ... மேலும் பார்க்க

ஜவ்வாது மலை: அதானி மின் திட்டம்; ஒன்றிய அரசு அனுமதி! - பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம்,... மேலும் பார்க்க