செய்திகள் :

`என் கார்ல வருகிறேன்' - அனிதா ராதாகிருஷ்ணன்; `போலீஸ் வாகனத்துல ஏறுங்க.!' - கைதின் போது நடந்தது என்ன?

post image

திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேசியதாகவும், கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல், முதலமைச்சர் விஜய் நடிகை ஒருவருடன் வீட்டில் இருப்பதாக கூறி ஒருமையில் பேசியிருந்தார்.

இதையடுத்து ஆத்தூர் தவெக நகரச் செயலர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் கடந்த 25 ஆம் தேதி திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது

இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் நடந்த பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து ஆத்தூர் போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அப்போது அங்கு நின்ற திமுகவினர் அவரை கைது செய்ய விடாமல் தடுத்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது

தொடர்ந்து அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் தனது வாகனத்தில் வருவதாக தெரிவித்தார். ஆனால் போலீஸார் அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கு நின்ற திமுகவினர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவரை அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க