செய்திகள் :

மொபைல் போனில் பேசியபடி சென்ற கூலித்தொழிலாளி; மூடி திறந்திருந்த சாக்கடை குழியில் விழுந்து இறந்த சோகம்

post image

மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் இரண்டு நாள்களுக்கு முன்பு செம்பூரில் மரம் விழுந்து 11 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தான். தற்போது சாக்கிநாகாவில் மழையின்போது அஸ்லாம் இசாக் ஷேக் என்ற 55 வயது நபர் திறந்திருந்த மேன்ஹோலில் (பாதாளச் சாக்கடை) விழுந்து உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான ஷேக், தனது மொபைலில் பேசியபடி சாக்கிநாகாவின் கைரானி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திறந்திருந்த மேன்ஹோலைச் (பாதாள சாக்கடை) சுற்றி பாதுகாப்பு வலை போன்ற இரும்புத் தடுப்பை அமைக்கும் பணியில் மாநகராட்சி நியமித்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஷேக் மேன்ஹோலை நெருங்கியபோது, அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை எச்சரிக்க சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தச் சத்தம் கேட்காமல் திறந்திருந்த சாக்கடை குழியில் ஷேக் விழுந்தார்.

சம்பவம் நடந்த இடம்

உடனே தொழிலாளர்கள் ஷேக்கை மீட்பதற்காக மேன்ஹோலுக்குள் ஏணியை இறக்கினர். ஆனால் அதற்குள் அவரை மழை நீர் அடித்துச் சென்றுவிட்டது.

அவரது குடை மற்றும் செருப்புகளை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நீரின் பலத்த ஓட்டம் காரணமாக அவர் எந்த திசையில் அடித்துச் செல்லப்பட்டார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. தீயணைப்புப் படையினர் வந்த பிறகு, சுவாசக் கருவிகளை அணிந்த மீட்புப் பணியாளர்கள் அருகிலுள்ள மற்றொரு வட்ட வடிவ மேன்ஹோல் வழியாக பாதாள சாக்கடைக்குள் இறங்கி தேடி ஷேக்கை வெளியில் எடுத்து ராஜா வாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, உதவி கமிஷனர் மற்றும் மூன்று பொறியாளர்கள் உட்பட நான்கு மாநகராட்சி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி பிடே உத்தரவிட்டுள்ளார்.

சாகிநாகாவில் திறந்திருந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து 55 வயது நபர் உயிரிழந்ததை அடுத்து, ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பணி நடைபெறும் இடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி பிடே கூறினார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மும்பையில் 1,03,934 மேன்ஹோல்கள் இருக்கின்றன. இவற்றில் 96,383 மேன்ஹோல்களில் பாதுகாப்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன, 1,800 மேன்ஹோல்கள் முந்தைய சாலைப் பணிகளின் போது மூடப்பட்டன. 4,446 மேன்ஹோல்களை திறந்துள்ளது.

சரியாக ஒரு வாரத்திற்கு முன்புதான், கிங் சர்க்கிள் பகுதியில் வெள்ளம் பாதித்த இடத்தை மேயர் ரிது தாவ்டே ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு சில அடிகள் தள்ளி மாநகராட்சி ஊழியர் ஒருவர் திறந்திருந்த சாக்கடைக்குள் இடுப்பளவு ஆழத்தில் விழுந்தார்.

4 ஆண்டுகளாக தபாலை பதுக்கிய தபால்காரர்; வீட்டில் 6 மூட்டைகளில் சிக்கிய அஞ்சல் - திருப்பூர் அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் தபால் சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் தபால் அலுவலகத்தில் தொடர்ந்த... மேலும் பார்க்க

ஐ.டி ஊழியர்களின் குழந்தைகளுக்கான டே கேர் - வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து கதவை அடைத்த பெண் ஊழியர்கள்

பெங்களூரு குண்டலஹள்ளி கேட் பகுதியில் உள்ள கேப்ஜெமினி டெக்னாலஜிக்கல் இந்தியா என்ற ஐ.டி கம்பெனியில் அங்கு பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பகல் நேரத்தில் கவனிப்பதற்காக, `சொசைட்டி ஜெனரல் பேபி கேர்' என்ற ... மேலும் பார்க்க

`ஒரு இன்ஸ்டா ஸ்டோரி, 5 வருட தடை!' கேத்தன் கொலையை கிண்டலடித்த பெண் மருத்துவரால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், அவரது மரணத்தைக் கிண்டல் செய்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டதாகக் கூறப்படும் பல் மருத்துவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் த... மேலும் பார்க்க

மும்பை கனமழை: புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்பு; இருவர் உயிரிழப்பு; தற்போதைய நிலவரம் என்ன?

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை நகரின் இன்று காலை ... மேலும் பார்க்க

Reels மோகம்: சினிமா பாடலுக்கு இயேசு சொரூபத்தைக் கொஞ்சிய பெண்; வைரல் வீடியோவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே இருக்கிறது, புண்ணியவாளன்புரம் கிராமம். அங்கு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில், ஒரு பெஞ்சில் சாய்ந்தவாறு இயேசு உட்கார்ந்திருப்பது போன்ற சொர... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்!

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை திருடியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர். கைது... மேலும் பார்க்க