செய்திகள் :

ஐ.டி ஊழியர்களின் குழந்தைகளுக்கான டே கேர் - வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து கதவை அடைத்த பெண் ஊழியர்கள்

post image

பெங்களூரு குண்டலஹள்ளி கேட் பகுதியில் உள்ள கேப்ஜெமினி டெக்னாலஜிக்கல் இந்தியா என்ற ஐ.டி கம்பெனியில் அங்கு பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பகல் நேரத்தில் கவனிப்பதற்காக, `சொசைட்டி ஜெனரல் பேபி கேர்' என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், தங்கள் குழந்தைகளை எளிதாகச் சென்று பார்க்கும் வசதிக்காக இது அமைக்கப்பட்டு இருந்தது.

பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் தங்களது குழந்தைகளை இங்கே விட்டுச்செல்வது வழக்கம். இக்குழந்தைகளை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சித்ரவதை செய்வது போன்ற காணொலி வாட்ஸ்ஆப் மூலம் பரவியது.

அந்த காணொலியில் குழந்தைகள் அழாமல் இருக்க அவர்களை வாஷிங்மெஷின் தொட்டியில் வைத்து அவர்களின் வாயில் தண்ணீர் விழுவது போன்று செய்து வைத்திருந்தனர். அதோடு அவர்கள் பாத்ரூம் கதவையும் அடைத்து வைத்திருந்தனர்.

இது தொடர்பான காணொலிகளை பார்த்தவுடன் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அந்த காணொலியை போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய மஞ்சுளா, விஜயலட்சுமி, பவானி, சிந்து மற்றும் பிந்து ஆகிய ஐந்து பெண் ஊழியர்கள் மீது புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர்கள், புகார் கொடுத்தவர்கள் மற்றும் பிற சாட்சிகளிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

விசாரணையின் போது சேகரிக்கப்படும் ஆதாரங்களை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.மேலும் தற்காலிகமாக அங்கு செயல்பட்டு வந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்படுவதாக கேப் ஜெமினி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிலும் தனியாக ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.

கேப்கெமினி நிர்வாகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே கேப்கெமினி முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது. உண்மைகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு வளாகத்தில் உள்ள பகல்நேரக் குழந்தைகள் காப்பகத்தை தற்காலிகமாக மூடுகிறோம்," என்று தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளாக தபாலை பதுக்கிய தபால்காரர்; வீட்டில் 6 மூட்டைகளில் சிக்கிய அஞ்சல் - திருப்பூர் அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறையின் தபால் சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் தபால் அலுவலகத்தில் தொடர்ந்த... மேலும் பார்க்க

`ஒரு இன்ஸ்டா ஸ்டோரி, 5 வருட தடை!' கேத்தன் கொலையை கிண்டலடித்த பெண் மருத்துவரால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், அவரது மரணத்தைக் கிண்டல் செய்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டதாகக் கூறப்படும் பல் மருத்துவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் த... மேலும் பார்க்க

மும்பை கனமழை: புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்பு; இருவர் உயிரிழப்பு; தற்போதைய நிலவரம் என்ன?

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை நகரின் இன்று காலை ... மேலும் பார்க்க

Reels மோகம்: சினிமா பாடலுக்கு இயேசு சொரூபத்தைக் கொஞ்சிய பெண்; வைரல் வீடியோவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே இருக்கிறது, புண்ணியவாளன்புரம் கிராமம். அங்கு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில், ஒரு பெஞ்சில் சாய்ந்தவாறு இயேசு உட்கார்ந்திருப்பது போன்ற சொர... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்!

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை திருடியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர். கைது... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ரஜபுத்திரர்களின் முதல் பெண் அரச வாரிசு; 13 வயதில் பொறுப்பேற்ற சிறுமி!

ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெயரளவுக்கு மன்னர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பல நூற்றாண்டாக பின்பற்றி வரும் அரச குடும்ப நடைமுறைகளைப் பின்பற்றி மன... மேலும் பார்க்க