செய்திகள் :

ராஜஸ்தான்: ரஜபுத்திரர்களின் முதல் பெண் அரச வாரிசு; 13 வயதில் பொறுப்பேற்ற சிறுமி!

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெயரளவுக்கு மன்னர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பல நூற்றாண்டாக பின்பற்றி வரும் அரச குடும்ப நடைமுறைகளைப் பின்பற்றி மன்னர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், அரண்மனைகள் என பல நூறு கோடிக்கு சொத்துக்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள பாலி மாவட்டத்தில் இருக்கும் கேர்வா என்ற கிராமத்தில் ரஜபுத்திரர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களை நிர்வகிக்க அரசர் ஒருவர் பெயரளவுக்கு இருக்கிறார். சமீபத்தில் அரச குடும்ப பொறுப்பாளராக இருந்த ஹரிஷ் சந்திர ஜோதா காலமானார்.

அவருக்கு ஆண் வாரிசு கிடையாது. 13 வயதில் தேஜஸ்வி குமாரி என்ற மகள் மட்டும் இருந்தார். வழக்கமாக இந்த பதவிகளை ஆண் வாரிசுகள்தான் ஏற்பது வழக்கம். ஆனால் ஹரிஷ் சந்திராவிற்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் அவரது 13 வயது மகள் மன்னர் குடும்ப வாரிசாக நியமிக்கப்பட்டார்.

இதற்கான சடங்குகள் 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜஸ்தான் கோட்டையில் நடந்தது. பாக் கா தஸ்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் துக்கம் முடிந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக சிறுமிக்கு பிங்க் கலர் தலைப்பாகை அணிவிக்கப்பட்டது.

அந்த தலைப்பாகை ஜோத்பூர்-மார்வார் அரச குடும்பத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. பெண் ஒருவர் ரஜபுத்திரர்களின் அரச குடும்ப வாரிசாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஒரு காலத்தில் ஜோத்பூர் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த பாலியின் சில பகுதிகளில் பாரம்பரியமாக ஒரு குடும்ப தலைவரின் மரணத்திற்குப் பிறகு தலைமை மற்றும் பொறுப்பை மாற்றுவதைக் "பாக் கா தஸ்தூர்" குறிக்கிறது.

இருப்பினும் அது வரலாற்று ரீதியாக ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் கடந்த 65 ஆண்டுகளாக இப்பதவி மாற்றுதல் நடைபெறாமல் இருந்தது. 7வது வகுப்பு படிக்கும் தேஜஸ்வி தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவார். அதோடு அப்பதவிக்கான பொறுப்புகளையும் சேர்த்து செய்வார் என்று கிராம பெரியவர்கள் தெரிவித்தனர்.

செட்டிநாட்டின் 'டைம் மெஷின்' : 200 வருட பாரம்பரியத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம்!

கண்ணைப் பறிக்கும் பிரம்மாண்ட காரை வீடுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கணக்கு வழக்கில் கறாரான வணிகப் பாரம்பரியம்... இவைதான் செட்டிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை. ஆனால், கா... மேலும் பார்க்க

`ஆண்டுக்கு ரூ.7,769 கோடி' - எலானிற்கு அடுத்து அதிக ஊதியம் வாங்கும் CEO!- யார் இந்த ஷங்க் மித்ரா?

உலக அளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஷங்க் மித்ரா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இதனை 'The Wall Stree... மேலும் பார்க்க

16 பாஸ்போர்ட்டுகள், 245 நாடுகள்.! தற்கொலை விளிம்பிலிருந்து மொத்த உலகை சுற்றி வந்த இந்திய இசை கலைஞர்!

ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம்16 இந்திய பாஸ்போர்ட்டுகள். ஒவ்வொன்றிலும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குத்தப்பட்ட முத்திரைகள், விசாக்கள். அண்டார்டிகா உட்பட 245 நாடுகளுக்கும் பயணித்து, ஒரு மனிதன் சாதிக்... மேலும் பார்க்க

Lingam: 'பூவே காதல் பூக்கும் பூவே' - நடிகை திவ்ய பாரதி க்யூட் கிளிக்ஸ் | Photo Album

Lingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya B... மேலும் பார்க்க

வாளேந்திய ஆக்ரோஷம்; கஞ்சா பயன்பாடு சர்ச்சை - குருத்வாராவை முற்றுகையிட்ட நிஹாங்க் சீக்கியர்கள் யார்?

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா ஒன்றை 6 நிஹாங்க் சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். அவர்கள் குருத்வாராவின் மேல் தளத்திற்கு சென்று தடுப்பு அமைத்துக்கொண்டு இருந்தனர். பார்க்கிங்... மேலும் பார்க்க