செய்திகள் :

"ஸாரி அப்பா, அம்மா... செல்போனில் ஆதாரங்கள் உள்ளன" - போதை கணவரால் துயர முடிவை எடுத்த இளம்பெண்!

post image

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ்(32). இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த நாகராஜன் - கலா தம்பதியரின் மகள் விக்னேஸ்வரி (27) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மூன்று நாள்களுக்கு முன் இவர்கள் இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் படுக்கையறை மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார் விக்னேஸ்வரி. அபிலாஷின் தந்தை சந்திரன் வீட்டிற்கு வந்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ​அவர் விக்னேஸ்வரியின் செல் போனுக்குத் தொடர்பு கொண்டபோது எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், பக்கத்து வீட்டாரின் உதவியுடன் படுக்கையறை ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பார்த்தபோதுதான் விக்னேஸ்வரி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். விக்னேஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து சிலமணி நேரம் ஆனதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட அபிலாஷ்

விக்னேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட படுக்கையறையில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், "​அம்மா, எனது செல்போனை நன்றாகப் பரிசோதிக்க வேண்டும். எல்லா ஆதாரங்களும் அதில் உள்ளன. இனி இங்கு வாழ முடியாது. மது குடித்துவிட்டு கணவர் அபிலாஷ் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தார். அப்பா இதய நோயாளி என்பதால் எதையும் சொல்லவில்லை. ஒரு ஐ.டி நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்திருந்தேன். அது முடியும் வரை சகித்துக் கொண்டு பொறுத்திருக்க வேண்டியதாயிற்று. எனது தற்கொலைக்கு அபிலாஷும் அவரது மதுப்பழக்கமும்தான் காரணம். ஸாரி அப்பா, அம்மா..." என விக்னேஸ்வரி எழுதியிருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட விக்னேஸ்வரி

விக்னேஸ்வரியின் செல்போனை ஆய்வு செய்ததில், அவர் கணவர் உடல் ரீதியான சித்ரவதை செய்ததால் ஏற்பட்ட காயங்களின் சில புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் தனது அம்மாவுக்காக பதிவுசெய்து வைத்திருந்த வாய்ஸ் ரெக்கார்டிங் செல்போனில் இருந்துள்ளது.  கடிதம் மற்றும் செல்போன் ஆதாரங்கள் அடிப்படையில், விக்னேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டியதாக அபிலாஷ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  தனியார் பேமெண்ட் ஆப் நிறுவனத்தில் வேலைசெய்யும் அபிலாஷ் நேற்று மாலை வீடுதிரும்பியதும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விக்னேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தவெக MLA இளையராஜாவிடம் பேரம் பேசியது என்ன... சிக்கும் திமுக பிரமுகர்கள்? - யார் இந்த திருநாவுக்கரசு?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இளையராஜா. இவர், 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் யூடியூபரும் தேர்தல் வியூ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

"அவர்தான் நான் பெயிலாக காரணம்" - ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன்

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் ஆண்டு வரை ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: "கழிவறையில் மறைத்து வைப்போம்" - விசாரணையில் பகீர் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது அதனைத் திருடியதாக உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி கோடிக... மேலும் பார்க்க

கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எடமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (30). விவாகரத்தான இவர், கடந்த ஜூன் 27-ம் தேதி திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எண் 108-ல் வாடகைக்கு தங்கியு... மேலும் பார்க்க

டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும்" - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்... மேலும் பார்க்க