செய்திகள் :

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: "கழிவறையில் மறைத்து வைப்போம்" - விசாரணையில் பகீர் தகவல்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது அதனைத் திருடியதாக உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து கைதானவர்களில் ஒருவரான அவினாஷ் சுக்லா என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கோடிக்கணக்கான ரூபாயைத் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதோடு கோயில் உண்டியல் பணம் எண்ணுவதில் கோயில் டிரஸ்ட் பொருளாளர் அனில் மிஸ்ரா முங்கியப் பங்கு வகித்ததாகவும் சுக்லா தெரிவித்தார். அனில் மிஸ்ரா மற்றும் கோயில் டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் ஆகிய இரண்டு பேரும் கடந்த வாரம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

அவினாஷ்
அவினாஷ்

சம்பத் ராயிக்கு மிகவும் நெருக்கமான தின்னு யாதவ், உண்டியல் பணம் எண்ணும் பொறுப்பாளர் சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா, உண்டியல் எண்ணும் ஊழியர்கள் அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, மணீஷ் குமார், ராம் சங்கர், கருனேஷ் பாண்டே ஆகியோரிடமும் விசாரணை நடக்க இருக்கிறது.

அவினாஷ் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், உண்டியல் பணம் எண்ணும் அறையின் ஒரு சாவி தின்னு யாதவ்விடமும் மற்றொரு சாவி வங்கி ஊழியர்களிடமும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமாகவே உண்டியல் பணம் திருடப்பட்டதாக அவர் கூறினார்.

கண்காணிப்பு கேமரா இருந்ததால் அதில் சிக்காமல் இருக்க ஒருவர் பணத்தை எடுத்துக்கொள்ள, மற்றவர்கள் அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம்போல மறைப்பை உருவாக்கினர் என்றும் தெரிவித்துள்ளார்.

கோயில் வளாகத்திற்குள் பொருத்தப்பட்ட கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டதாகவும், ஆனால் கண்காணிப்பு ஊழியர்கள் தங்களின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கவில்லை என்றும் அவினாஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட பணத்தை முதலில் அங்குள்ள கழிவறையில் மறைத்து வைப்போம் என்றும், அதன் பிறகு சரியான நேரம் அமையும் போது அதனை வெளியில் எடுத்துச்செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருடிய பணத்தில் வீடு மற்றும் நிலம் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருடிய பணத்தில் ரூ.58 லட்சம் அவினாஷ் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

"அவர்தான் நான் பெயிலாக காரணம்" - ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன்

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் ஆண்டு வரை ... மேலும் பார்க்க

கேரளம்: லாட்ஜில் அறை எடுத்து குழந்தை பெற்ற பெண்; தாயும், சேயும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எடமுட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (30). விவாகரத்தான இவர், கடந்த ஜூன் 27-ம் தேதி திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எண் 108-ல் வாடகைக்கு தங்கியு... மேலும் பார்க்க

டெல்லி: ``2 நிமிடங்களில் முடிந்துவிடும்" - ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி

டெல்லியில் ஓடும் காரினுள்ளே 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்... மேலும் பார்க்க

கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.மனு (40). கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறுமி சென்றுள்ளார்... மேலும் பார்க்க

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல்

தருமபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் மனைவி, மகளை கொலை செய்துவிட்டு லாரி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்... மேலும் பார்க்க