செய்திகள் :

எம்.பி-யாக இருந்துகொண்டே எம்.எல்.ஏ-வுக்கு போட்டியிட முடியுமா? - சட்டம் என்ன சொல்கிறது? | Vote Vibes

post image

ஒரு சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும், அதேபோல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம்.

அப்படி ஒரு நபர் எம்.பி-யாக இருந்துகொண்டே எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட முடியுமா? அதேபோல ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளிலும் நீடிக்க முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது....

எம்.பி - எம்.எல்.ஏ

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை ஏதுமில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்ற பிறகு இரண்டு பதவிகளிலும் ஒரே நேரத்தில் நீடிக்க முடியாது என்று தான் சட்டம் சொல்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சட்டம் என்ன சொல்கிறது?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, ஒருவர் எம்.பி-யாக இருக்கும்போதே எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தனது ஒரு பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தானாகவே இழந்துவிடுவார்.

இந்திய அரசியலமைப்பின் 101(2) வது பிரிவின்படி, ஒருவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருக்க முடியாது.

எம்.பி-யாக இருப்பவர் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடும் போது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வெற்றி பெற்ற பின்னர் தனது எம்.பி பதவியை நிச்சயம் ராஜினாமா செய்ய வேண்டும்.

எம்.பி-க்களாக இருந்து எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டவர்கள் யார் யார்?

அரசியலில் எம்.பி-க்களாக இருந்து எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டவர்கள் சிலர் இருக்கின்றனர்.

அந்தவகையில் 1954-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காமராஜர் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ- வாகி இருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதேபோல பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்துக்கொண்டே 2014-ல் வாரணாசி தொகுதி எம்.பி ஆனார். அதன் பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

தவிர எடியூரப்பா 2018-ல் லோக் சபை எம்.பி-யாக இருந்துகொண்டே முதல்வர் வேட்பாளராக கர்நாடகாவில் போட்டியிட்டார். அதன் பிறகு அவரது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

போட்டியிட்ட அன்புமணி

தருமபுரி எம்.பி-யாக இருந்த அன்புமணி 2016 சட்டமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார்.

ஆனால் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியை தழுவி இருந்தாலும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்ததால் அதே பதவியை மீண்டும் தொடர்ந்தார்.

அன்புமணி
அன்புமணி

இப்படி ஒருவர் நாடாளுமன்றத்தில் எம்.பி-யாக இருந்தாலும் சட்டமன்றத்தில் போட்டியிடலாம். சட்டமன்றத்தில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் போட்டியிடலாம். ஆனால் ஒரே சமயத்தில் இரண்டு பதவிகளையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு ... மேலும் பார்க்க

பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: தமிழ்நாட்டில் முகாமிட்ட பாஜக-வின் முக்கியப் புள்ளிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்கள் இன்று மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்... மேலும் பார்க்க

கோவை தெற்கு: ``எத்தனைப் பேர் வந்தாலும்..." - வேட்புமனு தாக்கலுக்குப் பின் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டின் முதலமை... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர் தங்கம் தென்னரசு' - மு.க.ஸ்டாலின்

விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக மற... மேலும் பார்க்க

`30% கமிஷன்... கடவுள் சொத்திலும் கொள்ளை!’ - புதுச்சேரி என்.டி.ஏ அரசை விளாசிய ராகுல் காந்தி

தேர்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வந்த ராகுல் காந்தி, ``புதுச்சேரிக்கு வருவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். அதனால் புதுச்சேரி வந்து உங்களைப் பார்க்க நான் ஆசைப்படுவேன். புதுச்சேரியை நான் நேசிப... மேலும் பார்க்க

'திருநெல்வேலி செல்லும் விஜய்; வருத்தத்தில் கட்சி நிர்வாகிகள்!' - காரணம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். ஆனால், கட்சித் தலைவரின் வருகையால் குஷியாக வேண்டிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். ... மேலும் பார்க்க