அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவி...
`எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம்... ராசாவைக் கண்டிக்க வேண்டும்!' - ஆதவ் அர்ஜுனா
த.வெ.க அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக வன்னியரசும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகானும் இன்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அ.ராசாவின் பதிவு
த.வெ.க அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா, "முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்', மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்', வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்..." என்று விசிகவை கடுமையாகச் சாடியிருந்தார்.
ஆனால் ஆ.ராசா இந்தப் பதிவை உடனே நீக்கிவிட்டார். அவரின் இந்தப் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆதவ் அர்ஜுனா கண்டனம்
இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, "அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார் விஜய். இந்தியாவே பார்த்து வியக்கக்கூடிய அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாதபோது அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் நாங்கள் ஆட்சி அமைத்திருக்க முடியும். மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றோம்.
விமர்சனத்தை நாங்கள் கண்டிக்கிறோம்
அண்ணன் திருமாவளவன் மீதான ஆ.ராசாவின் இந்த விமர்சனத்தை நாங்கள் கண்டிக்கிறோம். எதிர்க்கட்சி அரசியலை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் ஒரு கட்சியின் தலைவரையோ அல்லது தனிநபர் விமர்சனத்தையோ, தொண்டர்களையோ பெண்களின் உறவை மையப்படுத்தி பேசுவதை பெரியாரும், அண்ணாவும் கற்றுக்கொடுத்தது அல்ல.

ஸ்டாலினின் விளக்கம் என்ன?
கடமை, கண்ணியம் என்று பேசும் திமுகவிற்கு இது எதுவும் இல்லை. கலைஞரின் கோட்பாடுகளை எல்லாம் மறந்துவிட்டார்கள். ஆ.ராசாவின் பதிவிற்கு ஸ்டாலினின் விளக்கம் என்ன? எங்களுக்கு இருக்கும் ஜனநாயக பண்பு 75 ஆண்டுக்காலம் ஆண்ட திமுகவிற்கு இல்லை.
அண்ணன் ஆ.ராசா அவர்களின் பதிவை கண்டிக்கிறோம். தமிழக மக்களிடமும் அண்ணன் திருமாவளவனிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம் பெண்ணைத் தொடர்புபடுத்தி ஆ.ராசா வெளியிட்டிருந்த பதிவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.














