செய்திகள் :

ஏறுமுகத்தில் தொழில்துறை... இறங்குமுகத்தில் விவசாயம்... கவனம் செலுத்துவாரா முதல்வர்?

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்.

‘தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.52,831.20 கோடி; 2024-25-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 51,862.76 கோடி’ என்று இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதாவது, முந்தைய ஆண்டுகளைவிட, 3.22% குறைந்து, இறங்குமுகத்தில் இருக்கிறது.

வேளாண் உற்பத்தி மதிப்பு, அகில இந்திய அளவில் அதிகரித்துவரும் அதேசமயம், தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக குறைந்துவருவது, யோசிக்க வேண்டிய விஷயமே!

இதைப் பற்றி பேசும் வேளாண் பொருளியல் நிபுணர்கள், ‘‘விவசாய நிலங்கள் குறைந்து வருகின்றன என்று மாநில திட்டக்குழுவே சுட்டிக் காட்டியிருக்கிறது. விவசாயத்தில் முதலீடு செய்பவர்களைவிட, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள்தான் அதிகம். அதனால்தான் விவசாய நிலங்கள் குறைந்து வருகின்றன. ஆனால், ஆளும் தி.மு.க அரசு விழித்துக்கொள்ளவில்லை. அதன் எதிர்விளைவுதான், உற்பத்தியில் இறங்குமுகம்.

60%க்கும் மேற்பட்டோர் வேளாண் மற்றும் அதுசார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்துக்கு விவசாயம்தான் அடிப்படை. ஏரி, குளங்கள், ஆறுகள் போன்றவை விவசாயத்துக்கான உயிர்நாடி. ஆனால், தொழில் வளர்ச்சி, நகர்மயமாக்கம் என்கிற பெயரில் அவையெல்லாம் தொடர்ந்து கபளீகரம் செய்யப்படுகின்றன’’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

‘கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி 5.66% ஆக உயர்ந்துள்ளது. கேழ்வரகு, கொய்யா உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம், மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக்கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இரண்டாமிடம்’ என்று கடந்த மே மாதத்தில் ‘பெருமை’ அறிக்கையை வெளியிட்டது, தமிழ்நாடு அரசு. வேளாண் உற்பத்தி இறங்குமுகமாக உள்ள நிலையில், ஒன்றிரண்டு விஷயங்களில் முதலிடம், இரண்டாமிடத்தில் இருப்பதைச் சொல்லி, சமாளிக்கப் பார்த்தது.

‘தொழில்வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்’ என்று ரிசர்வ் வங்கியின் தரவுகளை பெருமைபொங்க எக்ஸ் தளத்தில் சுடச்சுட பகிரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதே ரிசர்வ் வங்கி குறிப்பிடும், ‘வேளாண் உற்பத்தி இறங்குமுகம்’ என்பது பற்றி அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

விவசாயத்தைத் தூக்கி நிறுத்த, சிறப்புத் திட்டங்கள் எதையும் விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளைக் களைந்தாலே போதும், உணவு உற்பத்தியில் அவர்கள் சாதனை படைத்துவிடுவார்கள். ஆம், ‘உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை’ என்று தரவுகள் வெளியான ஆண்டுகளில் எல்லாம், இதுதான் நடந்தது.

‘தொழில்துறையும் வேளாண் துறையும் இரண்டு கண்கள்’ என்று சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண் உற்பத்தியிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், இது வேளாண்மை சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல... மக்களின் அன்றாட உணவுப் பிரச்னையும்கூட!

- ஆசிரியர்

சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒல... மேலும் பார்க்க

``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை" - அன்புமணி காட்டம்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகத... மேலும் பார்க்க

''இதுவொரு முக்கியமான மைல்கல்" - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்... மேலும் பார்க்க

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந... மேலும் பார்க்க